For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐ.சி.யூவிற்குள் பலாத்கார முயற்சி; மருத்துவ மாணவி கொலை: வார்டு பாய் கைது!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திப்ருகார்: அஸ்ஸாம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மாணவியை பாலியல் பலாத்காரம் செய்யமுயன்று, கொலை செய்த வார்டு பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

அஸ்ஸாம் மாநிலம், திப்ருகாரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் முதுநிலை மருத்துவம் முதல் ஆண்டு படித்து வந்தவர் சரிதா.

இவர் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் வியாழக்கிழமை (8ஆம் தேதி) இரவு பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை (9ஆம் தேதி) காலை 8 மணிக்கு தீவிர சிகிச்சை பிரிவு அறைக்கு சென்ற நர்சுகள், சரிதா கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து காவல்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த காவல்துறையினர், இது தொடர்பாக வார்டு பாய் கிரு மெக் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், சரிதாவை கொலை செய்ததை வார்டு பாய் கிரு மெக் ஒப்புக்கொண்டார்.

மேலும், சரிதாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை கொலை செய்ததாகவும் அவன் கூறியுள்ளார். இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட சரிதா, இதே கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்திருந்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 7ஆம் தேதி தன்னோடு பணிபுரியும் டாக்டர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A junior woman doctor undergoing post-graduation at the Assam Medical College and Hospital (AMCH) in Dibrugarh was murdered at the intensive care unit (ICU) of the oldest healthcare institute in the northeast on Friday, possibly after a failed rape attempt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X