ஷீலா தீட்சித்தை வீழ்த்தினார் கேஜ்ரிவால்
டெல்லி: டெல்லியில் ஆட்சியை இழந்ததோடு, 10 தொகுதிகளில் கூட வெல்ல முடியாத நிலைக்கு காங்கிரஸ் போய் விட்டதால், டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மேலும் புதுடெல்லி தொகுதியில் அவர் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலிடம் தோல்வியையும் தழுவினார்.

ஷீலா தீட்சித்தை எதிர்த்து புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட அரவிந்த் கேஜ்ரிவால் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். 3 முறை முதல்வரான ஷீலா தீட்சித்தின், 4வது முறை முதல்வர் ஆகும் கனவை கேஜ்ரிவால் தோற்கடித்து விட்டார்.
வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் ஷீலாவை வீழ்த்தி கேஜ்ரிவால் வெற்றி பெற்றார்.
கடந்த 15 வருடங்களாக காங்கிரஸ் வசம் இருந்து வந்த தலைநகர் தற்போது பாஜக வசம் போய்விட்டது. காங்கிரஸுக்கு பெரும் தோல்வியைக் கொடுத்துள்ளது ஆம் ஆத்மி. தேர்தல் முடிவுகள் மிகவும் அதிர்ச்சிகரமாக இருப்பதால் காங்கிரஸ் வட்டாரம் அமைதியில் உறைந்துள்ளது.
பெரும் தோல்விக்கு காங்கிரஸ் போய் விட்டதால் ஷீலா தீட்சித் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications