"இந்தியா" கூட்டணிக்கு அக்னி பரீட்சையாக காத்திருக்கும் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் எப்போது?
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கவில்லை. ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தலானது "இந்தியா" கூட்டணி கட்சிகளான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸுக்கு அக்னி பரீட்சையாகவே இருக்கும். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சியைத் தக்க வைக்கும் முனைப்பில் "இந்தியா" கூட்டணி தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது. இதனால் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் எப்போது என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கான இடங்கள் 41.

2019-ம் ஆண்டு ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் முடிவுகள்:
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- 30
காங்கிரஸ் 16
பாஜக 25
2019-ம் ஆண்டு ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் காங்கிரஸும் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தன. ஜார்க்கண்ட் முதல்வராக முக்தி மோர்ச்சாவின் ஹேமந்த் சோரன் பதவியேற்றார்.
தேசிய அளவில் இந்தியா கூட்டணி உருவான போது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் இடம் பெற்றது. இந்த கூட்டணியையும் உடைக்க பாஜக பகீரத முயற்சிகளை மேற்கொண்டது. இதன் ஒரு கட்டமாக நில மோசடி வழக்கில் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இதனால் ஹேமந்த் சோரன் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏக்களை வளைத்து பாஜக புதிய கூட்டணி அமைக்க முயற்சிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கவில்லை. ஹேமந்த் சோரனுக்கு பதில் சாம்பாய் சோரன் முதல்வரானார்.

பின்னர் ஹேமந்த் சோரன் ஜாமீனில் விடுதலையாகி மீண்டும் முதல்வரானார். சட்டசபையில் மீண்டும் பெரும்பான்மையையும் நிரூபித்தார். தற்போதைய நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் காங்கிரஸும் வலிமையாகவே உள்ளன. இந்த மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகதான் பெரிய கட்சி. ஆனால் இந்த முறை பீகாரின் ஐக்கிய ஜனதா தளமும் 11 இடங்களில் போட்டியிடுவோம் என அறிவித்திருப்பதால் அந்த கூட்டணியில் குழப்பம் நிலவுகிறது.
இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படவில்லை. இதனால் ஜார்க்கண்ட் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலானது "இந்தியா" கூட்டணிக்காக அக்னி பரீட்சையாக இருக்கும் என்பதால் மீண்டும் வெல்வதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் காங்கிரஸும் முனைப்புடன் இருக்கின்றன.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications