லோக்சபா தேர்தலுடன் ஆந்திர, தெலுங்கானா சட்டசபை தேர்தல்?
Subscribe to Oneindia Tamil

தெலுங்கானா தனி மாநிலத்துக்கான மசோதா நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளிக்க இருக்கிறார்.
அதே நேரத்தில் அம்மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி ராஜினாமா செய்து ஒரு வாரமாகியும் இன்னும் அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் லோக்சபா தேர்தலுடனேயே ஆந்திர, தெலுங்கானா சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த தேர்தல் முடிந்த பின்னர் தெலுங்கானா, சீமாந்திரா மாநிலங்கள் முறைப்படி பிரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications