இந்தியாவில்தான் “நவீன அடிமைகள்” அதிகம்- குளோபல் ஸ்லேவரி இண்டெக்ஸ் ஆய்வில் தகவல்!
டெல்லி: "நவீன அடிமைகள்" அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 5 இடத்தில் உள்ளது என்ற தகவல் குளோபல் ஸ்லேவரி இண்டெக்ஸ் 2014 அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் உள்ள நவீன அடிமைகளில் 61 சதவிகிதம் பேர் உள்ள 5 நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பும், வாக்ஸ்ப்ரீ பவுண்டேசன் அமைப்பும் இணைந்து 167 நாடுகளில் நடத்திய குளோபல் ஸ்லேவரி இண்டெக்ஸ் 2014 அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அடிமைத் தளையை ஒழிக்கும் நோக்கத்தில் ஆண்டு தோறும் இந்த அறிக்கை தயாரிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் 35.8 மில்லியன் மக்கள் நவீனக் கால அடிமைகளாக வாழ்கிறார்கள் என்று அதில் மதிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் தொகையில் நவீன அடிமைகள் அதிகம் வாழும் பட்டியலில் முதலிடத்தில் மவுரிடானியா உள்ளது.
2 ஆவது இடத்தில் உஸ்பெகிஸ்தான், 3 ஆவது இடத்தில் ஹைதி, 4 ஆவது இடத்தில் கத்தார், 5 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது.
உலகில் உள்ள நவீன அடிமைகளில் 61 சதவிகிதம் பேர் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, உஸ்பெகிஸ்தான் ஆகிய 5 நாடுகளில் உள்ளனர் என்றும், அந்த 5 நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.
125 கோடியே 21 லட்சத்து 39 ஆயிரத்து 596 மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், 1 கோடியே 42 லட்சத்து 85 ஆயிரத்து 700 மக்கள் அடிமைகளாக வாழ்கிறார்கள்.
இந்தியாவில் கட்டுமானம், விவசாயம், வீட்டு வேலை, ஜவுளி உற்பத்தி உள்ளிட்ட தொழில்களில் மக்கள் நவீன அடிமைகளாக நடத்தப்படுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுமட்டுமின்றி, கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல், கட்டாயத் திருமணம் செய்து வைத்தல் போன்ற காரணங்களால் இந்தியாவில் பெண்கள் நவீன அடிமைகளாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவீன அடிமைகள் கலாச்சாரம் பரவி வருவதால், உலகம் முழுவதும் அடிமை வாழ்க்கையை வாழ்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 23 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
அடிமைத் தனத்தை ஒழிகக சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் என்றும், ஆட்களை வலுகட்டாயமாக வேலை வாங்குபவர்களுக்கு தண்டனையை அதிகரிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
-
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications