ராஜஸ்தானில் கேட்டதை விட 5 மடங்கு அதிக பணத்தைக் "கக்கிய" ஏடிஎம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் சிகார் மாவட்டத்தில் அஜித்கர் நகரில் தனியார் வங்கி ஏ.டி.எம்.,மில் வாடிக்கையாளர்கள் கேட்கும் தொகைக்கு அதிகமாக 5 மடங்கு பணம் வெளியேறியதால் பணம் எடுக்க கூட்டம் அலைமோதியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அஜித்கர் நகரில் இயங்கிவரும் ஆக்சிஸ் பேங்க் ஏடிஎம்,.மில் வாடிக்கையாளர்கள் நூறு ரூபாய் கேட்டால், ஐநூறு ரூபாய் வந்துள்ளது. அவ்வாறு கொடுக்கப்பட்ட தொகை அவர்களது வங்கிக் கணக்கில் இருந்தும் கழிக்கப்படவில்லை. இதையறிந்த பொதுமக்கள் பணம் எடுக்க அந்த ஏடிஎம்,.மில் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக அந்த ஏடிஎம் மூடப்பட்டது.

இது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், குறிப்பிட்ட அளவை விட அதிகமான பணம் ஏடிஎம் பணப் பெட்டியில் அடுக்கப்பட்டதே காரணம் என தெரிய வந்துள்ளது.
அந்த ஏ.டி.எம்.,மில் இருந்து வாடிக்கையாளர்கள் எவ்வளவு பணம் எடுத்துச் சென்றனர் என்றோ, எவ்வாறு வங்கி அந்த தொகையை மீட்கப்போகிறது என்றோ வங்கி நிர்வாகம் கருத்துக் கூற மறுத்துவிட்டது.












Click it and Unblock the Notifications