கேரளாவில் இறக்கிவிட்ட பெண்ணின் வீட்டிற்குள் சென்று பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர்!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பயணியைப் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றிங்கல்லை அடுத்த செப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் செப்பள்ளி ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

Auto driver rapes a lady passenger

சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த சுமார் 38 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ராஜேசின் ஆட்டோவில் சவாரி செய்தார். அவர் ஆற்றிங்கல் மார்க்கெட்டுக்கு சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு ஆட்டோ மூலம் தனது வீட்டிற்கு சென்றார்.

அந்த பெண்ணின் வீடு ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்தில் இருந்தது. மேலும் அப்போது அந்த வீட்டில் வேறு யாரும் இல்லை. தனியாக இருந்த அந்த இடத்தில் பெண் பயணியை இறக்கி விட்ட ஆட்டோ டிரைவர் ராஜேசுக்கு விபரீத எண்ணம் ஏற்பட்டது.

உடனே அவர், அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அவரிடம் இருந்து தப்பி வீட்டிற்குள் ஓடினார். ஆனால் அவரை பின் தொடர்ந்து அங்கு சென்ற ராஜேஷ் அந்த பெண்ணை பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடி விட்டார்.

இதுபற்றி ஆற்றிங்கல் போலீசில் பாதிக்கப்பட்ட பெண் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் ராஜேசை கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே பெண்களிடம் அத்துமீறியதாகவும், அடிதடி வழக்குகளும் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+