பெங்களூரில் அரைகுறை ஆடை அணிந்ததாகக் கூறி பெண்ணை திட்டிய ஆட்டோ டிரைவர்
பெங்களூர்: பெங்களூரில் முழங்கால் வரை கவுன் அணிந்திருந்த பெண்ணை ஆட்டோ டிரைவர் ஒழுக்கமற்றவர் என்று கூறி அறிவுரை வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரை சேர்ந்தவர் ஐஸ்வர்யா சுப்பிரமணியன்(28). பத்திரிக்கையாளர். அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு தனது வீட்டிற்கு செல்ல ஆட்டோவில் ஏறியுள்ளார். தனது வீட்டின் அருகே அவர் ஆட்டோவில் இருந்து இறங்கியுள்ளார்.

அப்போது ஆட்டோ ஓட்டுனர் அவரை அழைத்து கூறியதாவது,
நான் கூறப் போவதை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் அணிந்துள்ள ஆடை சரியில்லை. முறையாக ஆடை அணியுங்கள் என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட ஐஸ்வர்யா கோபம் அடைந்து நான் என்ன ஆடை அணிவது, அணியக் கூடாது என்று நீங்கள் கூறத் தேவையில்லை. இது உங்களுக்கு தேவை இல்லாத விஷயம் என்று தெரிவித்துள்ளார். அதற்கு ஆட்டோ டிரைவரோ, நீங்கள் அணிந்துள்ள ஆடையால் உங்களை பார்த்தால் ஒழுக்கமற்றவர் போன்று தெரிகிறது என்றுள்ளார்.
இதற்கிடையே அப்பகுதியில் இருந்த 2 பேர் ஓடி வந்து ஆட்டோ டிரைவருக்கு ஆதரவாக பேசியுள்ளனர். பின்னர் அங்கு வந்த மேலும் சிலர் ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக பேசியுள்ளனர். இது குறித்து ஐஸ்வர்யா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications