மோடிக்கு கூடும் கூட்டம் ஆச்சரியப்படுத்துகிறது, பிரதமராக ஆதரவு தருவேன்- அழகிரி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நரேந்திர மோடிக்குக் கூடும் கூட்டம் ஆச்சரியப்படுத்துகிறது. நானே வண்டலூருக்கு மோடி வந்தபோது கூடிய கூட்டத்தைப் பார்த்து மிரண்டு விட்டேன். அவர் பிரதமரானால் அதற்கு நான் ஆதரவு தருவேன் என்று மு.க.அழகிரி கூறியுள்ளார்.

இதுகுறித்து டைம்ஸ் நவ் டிவிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வர். நல்ல நிர்வாகி. அதனால்தான் நல்ல முதல்வராக அவரால் இருக்க முடிகிறது.
வண்டலூரில் நடந்த மோடி கூட்டத்தை நான் பார்த்தேன். அப்போது கூடிய கூட்டத்தைப் பார்த்து அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தேன். நான் எங்கு போனாலும் இளைஞர்கள் மத்தியில் மோடி குறித்த பேச்சாகத்தான் உள்ளது.
ஒரு எம்.பியாக, பிரதமராக அவரைத் தேர்வு செய்வதற்கு நான் ஆதரவு தருவேன் என்றார் அழகிரி.












Click it and Unblock the Notifications