மோடி பிரதமரானால்தான் நாடு வளர்ச்சி அடையும்: ராம்தேவ்
டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமரானால்தான் நாடு வளர்ச்சி அடையும் என்று யோகா குரு ராம்தேவ் கூறியுள்ளார்.
டெல்லியில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் யோகா குரு ராம்தேவ் மற்றும் குஜராத் முதல்வரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ராம்தேவ் பேசியதாவது: நரேந்திர மோடி பிரதமரானால் நாட்டுக்கு பேரழிவு என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறுகிறார். உண்மையில் காங்கிரஸ் ஆட்சியில்தான் நாடு சீரழிந்து விட்டது. அதன் மக்கள் விரோத கொள்கைகளால் நாட்டின் வளர்ச்சியே பாதிக்கப்பட்டுள்ளது. இதை சீரமைக்க பிரதமராக நரேந்திர மோடி வர வேண்டும்.
மோடி நாட்டின் பிரதமரானால், முதல் கட்டமாக பல்வேறு விதமான வரிகளை ரத்து செய்து எல்லாவற்றையும் வங்கி பரிமாற்ற வரி என்ற பெயரில் ஒரே வரியாக கொண்டு வரவேண்டும்.
125 கோடி மக்களின் நலனுக்காக நாட்டில் பொருளாதார சுதந்திரம் கொண்டு வர வேண்டும். விவசாயிகள் நலனுக்கான திட்டங்களை மோடி கொண்டு வர வேண்டும்.
மோடி பிரதமரானால் வெளிநாடுகளில் நம் அரசியல்வாதிகள் பதுக்கி வைத்துள்ள பணத்தை நாட்டின் சொத்தாக அறிவித்து அதை கொண்டு வர நடவடிக்கை எடுப்பார்.
இவ்வாறு ராம்தேவ் கூறினார்.












Click it and Unblock the Notifications