பெங்களூரில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பக்ரீத் கொண்டாட்டம் #bakrid

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: வன்முறை தலைவிரித்தாடிய பெங்களூரில் இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் நேற்று பிறப்பித்த புதிய உத்தரவைத் தொடர்ந்து பெங்களூரில் பெரும் கலவரம் வெடித்தது. தமிழர்களின் வானகங்கள், வர்த்தக நிறுவனங்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டன. மிகப் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் நடந்தேறின.

Bakrid celebrated in Bangaluru amidst heavy security

இதையடுத்து பெங்களூரில் 16 காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவும், பிற பகுதிகளில் 144 தடை உத்தரவும் போடப்பட்டது. இன்று பெங்களூரு மிகவும் அமைதியாக காணப்படுகிறது. அதேசமயம் பதட்டம் குறையவில்லை. ஊரே நிசப்தமாக உள்ளது.

மிக பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும், புற ராணுவப் படையினரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், தாங்கள் காவலுக்கு இருப்பதாகவும் பெங்களூரு போலீஸார் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் இன்று பெங்களூரு நகரில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகைகள் நடத்தப்பட்டன. தொழுகைக்குப் பின்னர் அனைவரும் வீடுகளுக்குப் போகுமாறும், வெளியில் சுற்ற வேண்டாம் என்றும் மத குருமார்கள் தொழுகைக்கு வந்தவர்களுக்கு அறிவுறுத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+