For Daily Alerts
Just In
பெங்களூர் ஏ.டி.எம். மையத்தில் பெண் அதிகாரியை தாக்கிய குற்றவாளி கைது
பெங்களூர் ஏ.டி.எம்.-ல் பெண் அதிகாரியிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி, அரிவாளால் தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை கொள்ளையன் ஒருவன் பறித்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்யக்கோரி கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து அம்மாநில போலீசார் குற்றவாளியை கண்டுபிடிக்க தீவிர முயற்சி எடுத்து வந்தனர். குற்றவாளி குறித்து தகவல் தெரிவிப்போருக்கு போலீசார் பரிசுத் தொகையும் அறிவித்திருந்தனர்.
குற்றவாளியின் புகைப்படத்தை அனைத்து காவல்நிலையத்திற்கும் போலீசார் அனுப்பி வைத்திருந்தனர். இந்நிலையில் அந்த குற்றவாளி கர்நாடக மாநிலம் தும்கூரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவனிடம் கர்நாடக மாநில போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
English summary
The man who was captured aggressively threatening and then brutally assaulting a 38-year old woman bank official on CCTV at an ATM kisosk in Bangalore last month was reportedly arrested from Tumkur in Karnataka on Saturday morning.
Story first published: Saturday, December 7, 2013, 13:58 [IST]