பெங்களூருவில் இனி பறக்கலாம்... ஹெலிகாப்டர் டாக்ஸி சர்வீஸ் அறிமுகம்
பெங்களூருவில் நாட்டிலேயே முதன்முறையாக ஹெலிகாப்டர் டாக்ஸி சர்வீஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பெங்களூரு : போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு நகரத்திற்கு வர ஹெலிகாப்டர் டாக்ஸி அறிமுகம் செய்யப்பட உள்ளது. நவம்பர் 2017ஆம் ஆண்டு முதல் ஹெலிகாப்டர் டாக்ஸியில் பெங்களூருவாசிகள் பறக்கலாம்.
பெங்களூரு போன்ற எல்க்ட்ரானிக்ஸ் நகரங்களில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துக்கொண்டே போகிறது. நகரத்திலிருந்து சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வதற்குள் மூச்சுத் திணறிவிடுகிறது. அவசரமாக விமானப் பயணத்திற்கு செல்வது கடினமான காரியமாக இருக்கிறது.
வேலை நேரங்களில் விமான நிலையத்திற்கு காரில் செல்லவே மூன்று மணிநேரம் ஆகிறது. ஏசி காரில் விமான நிலையத்திற்கு செல்ல ரூ. 1500 முதல் ரூ. 2500 வரை வாடகை கேட்கிறார்கள்.
இது வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கஷ்டங்களுக்கு விரைவில் பெங்களூரு விடுதலை பெறும் வகையில் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு வாடகை ஹெலிகாப்டர் சர்வீஸ் இயக்கப்பட இருக்கிறது.

முதல்முறை
நாட்டிலேயே முதன்முறையாக பெங்களூருவில்தான் இந்த சர்வீஸ் அறிமுகப்படுத்தப்படுகிறது. தும்பி ஏவியேஷன் நிறுவனம் பெங்களூரு சர்வதேச விமான நிறுவனத்துடன் இணைந்து இந்த சேவையை வழங்க உள்ளது.

5 ஆயிரம் அடியில் பறக்கும்
மத்திய சிவில் ஏவியேஷன் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா இதனை தெரிவித்துள்ளார். அரசு ஓபன் ஸ்கை பாலிசி திட்டத்தின் கீழ் ஹெலிகாப்டர்கள் 5 ஆயிரம் அடியில் பறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

15 நிமிடத்தில் செல்லலாம்
நகரிலிருந்து விமான நிலையத்துக்கு 15 நிமிடத்தில் செல்லும் வகையில் சர்வீஸ் இருக்கும் என்றும் தும்பி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் வாடகைக் கட்டணம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

90 ஹெலிபேடுகள்
13 இருக்கைகள் கொண்ட பெல் 412, 5 இருக்கைகள் கொண்ட பெல் 407 ஹெலிகாப்டர்கள் டாக்ஸிகளாக செயல்படஉள்ளன. பல அடுக்கு மாடிக் கட்டிடங்களின் மீது ஹெலிகாப்டர் இறங்குதளங்களை அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. சுமார் 90 ஹெலிபேடுகளை
அமைத்து ஹெலி டாக்சிகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications