For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நவ. 12-ல் நாடு தழுவிய வேலைநிறுத்தம்: வங்கி ஊழியர் சங்கம் அறிவிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசுடன் 2-ஆம்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் வரும் 12-ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் செய்யப் போவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஊதிய உயர்வு, வாரத்துக்கு 5 நாட்கள் பணி, ஓய்வூதியத்தை மாற்றியமைத்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வரும் 12-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.

Bank staff to strike work on Nov. 12

இதற்கிடையே, மத்திய அரசுடன் நடைபெற்ற முதல்சுற்று பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், திங்கட்கிழமை (10-ம் தேதி) இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இதுகுறித்து பேசிய அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வெங்கடாச்சலம், ‘‘எங்களது கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசின் தலைமை தொழிலாளர் நலத்துறை ஆணையர் மித்ராவுடன் முதல்சுற்று பேச்சுவார்த்தை நடத்தினோம். அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து, வரும் திங்கள்கிழமை (10-ம் தேதி) இரண்டாம்சுற்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். இதில் உடன்பாடு ஏற்படும் என நம்புகிறோம்.

உடன்பாடு ஏற்படாவிட்டால், ஏற்கெனவே திட்டமிட்டபடி 12-ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்பார்கள்'' என்றார்.

English summary
Functioning of all the banks will be hit on November 12 with the decision of United Forum of Banks Unions to observe a day's strike opposing inordinate delay in implementation of wage revision.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X