திகார் கைதிகளுக்கு சிறைக்குள்ளே செல்போன் வீசும் ‘பவுலர்கள்’... ஓடி ஓடி பிடிக்கும் போலீஸ்!
டெல்லி: டெல்லியில் உள்ள திகார் சிறைக் கைதிகளுக்கு வெளியில் இருந்த படி உறவினர்கள் செல்போன், சிகரெட் மற்றும் போதைப் பொருட்களை வீசுவது தொடர்கதையாகி உள்ளது. இவ்வாறு சிறைக்குள் வீசப்படும் பொருட்களைப் பிடிப்பதற்கென்றே கூடுதலாக போலீசார் பணியில் அமர்த்தப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைநகர் டெல்லியின் மேற்கு பகுதியில் திலக் நகரில் அமைந்துள்ளது திகார் சிறை. நாட்டிலேயே மிகப்பெரிய சிறை என்ற பெருமை திகாருக்கு உண்டு. காலப்போக்கில், சிறையைச் சுற்றி ஏராளமான குடியிருப்புகள் முளைத்து விட்டன. இதனால், தற்போது குடியிருப்புகளுக்கு மத்தியில் திகார் சிறை அமைந்திருப்பது போன்ற தோற்றம் காணப்படுகிறது.

இது சிறையில் உள்ள கைதிகளுக்கு மிகவும் வசதியாக இருப்பதாக தெரியவந்துள்ளது. அருகில் உள்ள குடியிருப்புகளில் இருந்து கைதிகளுக்கு பீடி, சிகரெட், புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் எளிதாக கிடைப்பதாக போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல், சமீபகாலமாக கைதிகளுக்கு அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிறைக்கு வெளியில் இருந்தபடி செல்போன்களை பிளாஸ்டிக் காகிதத்தில் சுற்றி, உள்ளே தூக்கி வீசுவது அதிகரித்துள்ளதாம்.
இவை பெரும்பாலும் சிறையைச் சுற்றி உள்ள கட்டிடங்கள் மற்றும் மேம்பாலத்தில் இருந்து வீசப்படுவதாக சிறை அதிகாரிகள் கூறுகின்றனர். சிறைக்கு அருகில் உள்ள மேம்பாலத்தில் இருந்து வீசப்படும் பொருட்கள் அறை எண் 8, 9,1 பகுதியிலும், ஜஹாங்கிர் பூரிலிருந்து வீசப்படும் பொருட்கள் அறை எண் 4 பகுதியிலும், திலிக் நகர் பகுதியில் இருந்து வீசப்படும் பொருட்கள் சிறை எண் 1 அல்லது 2 பகுதியிலும் விழுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
தினமும் இவ்வாறு வெளியில் இருந்து வீசப்படும் ஒன்று அல்லது இரண்டு செல்போன்கள் மீட்கப் படுவதாகவும், இதைத் தடுக்க கூடுதல் போலீசார் பணியில் அமர்த்தப் பட்டுள்ளதாகவும் திகார் சிறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வளவு தான் போலீசாரைக் காவலுக்கு வைத்தாலும், சிறையின் இருப்பிடத்தை மாற்றினால் மட்டுமே இத்தகைய அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் படும். எனவே, இது தொடர்பாக டெல்லி மாநில அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் உதவி கோரப்பட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications