சீரழித்துவிடுவேன், சுட்டுக் கொன்றுவிடுவேன்: பத்திரிக்கையாளர் பர்கா தத்துக்கு போன் மூலம் மிரட்டல்
டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரம் குறித்து தொடர்ந்து செய்தி வெளியிடும் பத்திரிக்கையாளர் பர்கா தத்துக்கு போன் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
பிரபல பத்திரிக்கையாளரும், என்டி டிவியின் கன்சல்டிங் எடிட்டருமான பர்கா தத் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரம் குறித்து தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இதை கண்டித்து அவருக்கு யாரோ போன் செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து பர்கா அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பர்கா மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி இது குறித்து வாக்குமூலமும் அளித்துள்ளார்.
மிரட்டல் போன் அழைப்பு பற்றி பர்கா நிகழ்ச்சி ஒன்றில் கூறுகையில்,
என்னை பலாத்காரம் செய்யப் போவதாகவும், சுட்டுக் கொலை செய்யப் போவதாகவும் யாரோ ஒருவர் எனக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்தார் என்றார்.