மாட்டுக் கறிக்குத் தடா போட்ட மகாராஷ்டிரா... தோல் கிடைக்காமல் திணறும் தமிழக "லெதர்" துறை!
மும்பை: ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவித்து வரும் தமிழகத் தோல் தொழில்துறையினர், தற்போது மகாராஷ்டிராவில் அமல்படுத்தப்பட்டுள்ள மாட்டுக் கறிக்குத் தடை காரணமாக புதிய சிக்கலைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிர தடையால் யாருக்குப் பிரச்சினையோ இல்லையோ, தமிழக தோல் மற்றும் தோல் பதனீட்டு துறையினருக்குத்தான் மிகப் பெரிய சிக்கல் வந்துள்ளது.
இந்தியாவின் தோல் பதனீட்டுத் துறையில் முன்னணியில் இருப்பது தமிழகம்தான். தமிழகத்தின் பங்கு மட்டும் 48 சதவீதமாகும். கடந்த 2014 ஏப்ரல் - நவம்பர் வரையிலான காலகட்டத்தில் ரூ 10,000 கோடி அளவுக்கு தமிழகத்தில் ஏற்றுமதி நடந்துள்ளது முக்கியமானது.

தோல் பொருட்கள் தயாரிப்பு...
அதேபோல இந்தியாவிலேயே அதிக அளவில் தோல் பொருட்கள் தயாராவதும் தமிழகத்தில்தான்.

கடும் சவால்கள்...
ஆனால் உலகளாவிய பொருளாதார சிக்கல், உள்ளூரில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தமிழக தோல் பதனீட்டுத் துறை கடும் சவால்களைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிர மாட்டுக் கறித் தடை அவர்களது வேதனைக்கு மேலும் வலி கூட்டுவதாக அமைந்துள்ளது.

தோல் விலை உயரும்...
இதுகுறித்து இந்திய தோல் பொருட்கள் ஏற்றுமதிக் கழகத்தின் தலைவரான ரபீக் அகமது கூறுகையில், இது மிகப் பெரிய பிரச்சினையை எங்களுக்கு ஏற்படுத்தும். இதன் காரணமாக தோல் பொருட்களின் விலையும் உயரும் என்றார்.

தட்டுப்பாடு அபாயம்...
தமிழகத்திற்கு மகாராஷ்டிராவிலிருந்து 40 சதவீத அளவுக்கு தோல் பொருட்கள் இறக்குமதியாகிறது. தற்போது இது முழுமையாக நின்று போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் தோல் பொருட்கள் நல்ல தரத்துடன் இருப்பதால்தான் இவை அதிக அளவில் தமிழக தோல் நிறுவனங்களால் வாங்கப்படுகிறதாம்.

தோலின் விலை...
மகாராஷ்டிர மாட்டுத் தோல் 35 முதல் 45 அடி வரை நீளமுள்ளதாக இருக்கிறது. இதன் விலை ரூ. 2400 ஆக இருக்கிறது. சிறிய ரக தோலின் விலை ரூ. 800 வரை உள்ளது.

தோல் தொழில் பாதிப்பு...
மொத்தத்தில் மாட்டுக் கறித் தடையானது, தமிழகத்தினின் தோல் தொழிலை ஆட்டிப் பார்க்கும் வகையில் அமைந்துள்ளதாக கூறுகிறார்கள் தோல் தொழில்துறையினர்.












Click it and Unblock the Notifications