கேரள மருத்துவர்கள் நினைத்திருந்தால் தமிழர் உயிரை காப்பாற்றியிருக்கலாம்... ஆம்புலன்ஸ் டிரைவர் ஆதங்கம்
விபத்தில் சிக்கிய முருகனுக்கு கேரள மருத்துவர்கள் அவசர சிகிச்சை அளித்திருந்தால் அவரின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என ஆதங்கத்தைக் கொட்டுகிறார் ஆம்புலன்ஸ் டிரைவர்.
திருவனந்தபுரம்: கேரள மருத்துவர்கள் நினைத்திருந்தால் விபத்தில் படுகாயம் அடைந்த தமிழர் முருகனின் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம் என்று அவரை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர் இப்போதும் ஆதங்கப்படுகிறார்.
இந்தச் சம்பவம் கேரளத்தில் தமிழர்கள் புறக்கணிக்கப்படும் நிலையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி, தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். கொல்லத்தில் பால் வியாபாரம் செய்து வந்தார். கடந்த 6ம் தேதி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவர் தனியார் ஆம்புலன்சில் கொல்லம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி உள்பட 6 மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

உயிருக்கு போராடி..
அனைத்து இடங்களிலும் வெண்டிலேட்டர் இல்லை, டாக்டர் இல்லை என்று கூறி அலைக்கழித்துள்ளனர். 7 மணி நேரத்திற்கும் மேலாக ஆம்புலன்சில் அலைய வைக்கப்பட்ட முருகன், உயிருக்குப் போராடி அதிலேயே இறந்தார்.
திடுக்கிடும் தகவல்கள்
இது குறித்து கேரள அரசு விசாரணை நடத்த உத்தரவிட்டது. விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து முருகனை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர் கூறியதாவது, " முருகனை மெடிட்ரினா மருத்துவமனையில் அனுமதிக்க டாக்டர்கள் மறுத்தனர். ஒரு டாக்டர் முருகனை பரிசோதிக்க ஆம்புலன்சுக்கு வந்தார்.
அனுமதி இல்லை
நோயாளி யார் என்று கேட்டார். தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றும் அவருடன் யாரும் வரவில்லை என்றும் தெரிவித்தேன். இதனால் அவர் வெண்டிலேட்டர் காலியில்லை என்றும், தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், உதவிக்கு ஆள் இல்லை என்பதாலும் அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
முயன்றிருந்தால்..
அந்த மருத்துவமனையில் போர்ட்டப்பிள் வெண்டிலேட்டர் வசதி உள்ளது. அங்குத் தலைமை டாக்டர் காலையில் பணிக்கு வருவார். அதுவரை போர்ட்டபிள் வெண்டிலேட்டர் மூலம் அவசர சிகிச்சை அளித்திருக்க முடியும்" என்று டிரைவர் கூறினார். போலீசார் நடத்திய விசாரணையில் மெடிட்ரினா மருத்துவமனையில் 7 வெண்டிலேட்டர் இருப்பது தெரிய வந்தது.
தமிழர்கள் புறக்கணிப்பு
இதில் 3 நோயாளிகள் பயன்பாட்டிலும், 3 பழுதாகியும், ஒன்று காலியாகவும் இருந்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால் டாக்டர்கள் முருகனுக்குச் சிகிச்சை அளிக்க மறுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications