அடுத்தவர் மனைவி மீது ஆசிட் வீசியவருக்கு மரண தண்டனை: ம.பி.கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

மத்திய பிரதேச மாநிலம், போர்சா நகரில் வசித்தவர் ரூபி குப்தா (28). கடந்தாண்டு, ஜூலை 21ம்தேதி இவரது வீட்டுக்குள் அத்துமீறி புகுந்த அதே பகுதியை சேர்ந்த யோகேந்திர சிங் தோமர், ரூபாவின் மீது திராவகத்தை வீசிவிட்டு தப்பி சென்றார். இந்த சம்பவத்தில், தடுக்க முற்பட்ட ரூபாவின் உறவினர்கள் சிலரும் காயமடைந்தனர்.
அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், ரூபா மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் யேகேந்திர சிங் தோமரை கைது செய்தனர். அம்பா மாவட்ட, கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையில் நீதிபதி சி.குப்தா தனது தீர்ப்பை அளித்துள்ளார். அந்த தீர்ப்பில் தோமருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
"இது மிகவும் மோசமான குற்றம். எனவே ஆயுள் தண்டனை போதாது என்பதால் மரண தண்டனை விதிக்கிறேன்" என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளார். தன்னை ஒரு தலையாக காதலித்த தோமரை திருமணம் செய்ய மறுத்த ரூபா, சஞ்சு குப்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனால் கோபமடைந்த தோமர், ரூபா தனது தாய் வீட்டுக்கு வந்திருந்தபோது ஆசிட் வீசினார்.
இதனிடையே தீர்ப்பு குறித்து ரூபாவின் கணவர் சஞ்சு குப்தா வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுபோன்ற தண்டனைகள்தான், வருங்காலங்களில் பெண்கள் மீதான தாக்குதலை நடத்துபவர்களை யோசிக்க வைக்கும் என்று அவர் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications