For Daily Alerts
Just In
பெங்களூருவில் 14 வயது சிறுமி பலாத்காரம் - 3 பேர் கைது
பெங்களூரு: பெங்களூருவில் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 3 பேர் கொண்ட கும்பலைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூருவில் உள்ள ஜே.பி.நகரில் 14 வயது சிறுமி ஒருவர் நேற்று 3 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியைப் பலாத்காரம் செய்த 3 பேரையும் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக பெங்களூரு கூடுதல் போலீஸ் கமிஷ்னர் சி.ஹெச்.பிரதாப் ரெட்டி கூறுகையில், ‘சிறுமி பலாத்காரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.
கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
English summary
Bengaluru Police on Thursday arrested three persons for gang raping a minor girl. The 14-year old victim is being treated for injuries in a hospital.
Story first published: Thursday, June 18, 2015, 18:17 [IST]