பிளாஸ்டிக் பயன்படுத்த தடை.. பெங்களூர் கோயில்களில் பூஜை கட்டணம் உயர்ந்தது
பெங்களூர்: பெங்களூரில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோயில்களில் பூஜை செய்வதிலும், பிரசாதம் வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
உதாரணத்திற்கு, பெங்களூர், யலகங்கா நியூ டவுனில் உள்ள விநாயகர் கோயிலில், சத்யநாராயண பூஜை மிகவும் பிரபலமானது. இதுவரை ரூ.10 என்ற கட்டணத்தில் பூஜை பொருட்கள் தரப்பட்டுவந்த நிலையில், இப்போது, அது ரூ.25 கட்டணமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு காரணம், ரூ.10க்கு பிளாஸ்டிக் தவிர்த்த உபகரணத்தை வாங்குவது பொருளாதார ரீதியில் வசதியாக இல்லை.

"இதுவரை பிரசாதம், தீர்த்தம் போன்றவற்றை பிளாஸ்டிக் கப்புகளில் கொடுத்துவந்தோம். அதை மாற்றி வேறு பொருட்களில் கொடுக்க வேண்டியதாக உள்ளது. எனவே அலுமினியம் மூலப்பொருள் கொண்ட, கப்புகளில் பிரசாதம் கொடுக்க வேண்டியுள்ளது" என்று கோயில் நிர்வாகி ஒருவர் கூறினார்.
இதையடுத்து பெங்களூரில் பல கோயில்களில் பூஜை செய்யும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications