பெங்களூர் மாநகராட்சிக்கு நாளை தேர்தல்! பாஜக-காங்கிரஸ் இடையே நேரடி போட்டி
பெங்களூர்: தமிழர்கள் பெருவாரியாக வசிக்கும், கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் மாநகராட்சிக்கு, நாளை தேர்தல் நடைபெறுகிறது. மாநகராட்சியை கைக்குள் வைத்துள்ள பாஜகவே மீண்டும் ஆட்சியை பிடிக்குமா அல்லது, மாநிலத்தில் அதிகாரத்திலுள்ள காங்கிரஸ் கைப்பற்றுமா என்பது வாக்காளர்கள் மத்தியிலுள்ள பரபரப்பு பேச்சாக மாறியுள்ளது.
பெங்களூர் மாநகராட்சி 198 வார்டுகளை கொண்டது. கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் பாஜக முதன்முறையாக காங்கிரஸ் வைவசம் தொடர்ந்து இருந்து வந்த மாநகராட்சியை கைப்பற்றியது.

இந்நிலையில், நாளை மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்பாடுகள் முழு அளவில் உள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பி.என்.ஸ்ரீநிவாச்சாரி அறிவித்துள்ளார். இதில் பொம்மனஹள்ளி பகுதியிலுள்ள ஹொங்கசந்திரா வார்டில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். எனவே எஞ்சிய 197 வார்டுகளுக்கு நாளை தேர்தல் நடக்கிறது.
காலை 7 மணிக்கு ஆரம்பிக்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணிவரை நடைபெறுகிறது. சுமார் ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட பெங்களூரில் வாக்காளர்கள் எண்ணிக்கை 73 லட்சத்து 88 ஆயிரத்து 256 பேராகும். கடந்த மாநகராட்சி தேர்தலில் 44 சதவீதம் மட்டுமே வாக்குப்பதிவானது. இம்முறை வாக்குப்பதிவு எண்ணிக்கையை உயர்த்த தேர்தல் ஆணையம் பிரசாரம் செய்து வருகிறது.
வாக்குப்பதிவுக்காக நகரில் 6759 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழர்கள் ஒட்டுமொத்தமாக யாருக்கு ஆதரவு அளிக்கிறார்களோ அவர்களே பெரும்பாலான வார்டுகளில் வெல்ல முடியும் என்ற நிலை உள்ளது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் சில, பாஜகவுக்கே வெல்ல வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றன. மாநிலத்தில் ஆளும் காங்கிரசுக்கு இது கவுரவ பிரச்சினை என்பதால் அக்கட்சி தீவிர வாக்குவேட்டையாடி வருகிறது. தேவகவுடாவின் மஜத 3வது இடம்பிடிக்கும் வாய்ப்புள்ளது.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications