பெங்களூர் மாநகராட்சிக்கு நாளை தேர்தல்! பாஜக-காங்கிரஸ் இடையே நேரடி போட்டி
பெங்களூர்: தமிழர்கள் பெருவாரியாக வசிக்கும், கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் மாநகராட்சிக்கு, நாளை தேர்தல் நடைபெறுகிறது. மாநகராட்சியை கைக்குள் வைத்துள்ள பாஜகவே மீண்டும் ஆட்சியை பிடிக்குமா அல்லது, மாநிலத்தில் அதிகாரத்திலுள்ள காங்கிரஸ் கைப்பற்றுமா என்பது வாக்காளர்கள் மத்தியிலுள்ள பரபரப்பு பேச்சாக மாறியுள்ளது.
பெங்களூர் மாநகராட்சி 198 வார்டுகளை கொண்டது. கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் பாஜக முதன்முறையாக காங்கிரஸ் வைவசம் தொடர்ந்து இருந்து வந்த மாநகராட்சியை கைப்பற்றியது.

இந்நிலையில், நாளை மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்பாடுகள் முழு அளவில் உள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பி.என்.ஸ்ரீநிவாச்சாரி அறிவித்துள்ளார். இதில் பொம்மனஹள்ளி பகுதியிலுள்ள ஹொங்கசந்திரா வார்டில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். எனவே எஞ்சிய 197 வார்டுகளுக்கு நாளை தேர்தல் நடக்கிறது.
காலை 7 மணிக்கு ஆரம்பிக்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணிவரை நடைபெறுகிறது. சுமார் ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட பெங்களூரில் வாக்காளர்கள் எண்ணிக்கை 73 லட்சத்து 88 ஆயிரத்து 256 பேராகும். கடந்த மாநகராட்சி தேர்தலில் 44 சதவீதம் மட்டுமே வாக்குப்பதிவானது. இம்முறை வாக்குப்பதிவு எண்ணிக்கையை உயர்த்த தேர்தல் ஆணையம் பிரசாரம் செய்து வருகிறது.
வாக்குப்பதிவுக்காக நகரில் 6759 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழர்கள் ஒட்டுமொத்தமாக யாருக்கு ஆதரவு அளிக்கிறார்களோ அவர்களே பெரும்பாலான வார்டுகளில் வெல்ல முடியும் என்ற நிலை உள்ளது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் சில, பாஜகவுக்கே வெல்ல வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றன. மாநிலத்தில் ஆளும் காங்கிரசுக்கு இது கவுரவ பிரச்சினை என்பதால் அக்கட்சி தீவிர வாக்குவேட்டையாடி வருகிறது. தேவகவுடாவின் மஜத 3வது இடம்பிடிக்கும் வாய்ப்புள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications