மகளுக்கு திருமண ஏற்பாடு செய்து வந்த ஏட்டு சிமி தீவிரவாதிகளால் கொலை
போபால்: போபால் மத்திய சிறையில் சிமி தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட ஏட்டு ராம்சங்கர் யாதவ் தனது மகளின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வந்த நிலையில் பலியாகியுள்ளார்.
மத்திய பிரேதச மாநிலம் போபாலில் உள்ள மத்திய சிறையில் பாதுகாவலராக பணியாற்றி வந்தவர் ஏட்டு ராம்சங்கர் யாதவ். மாரடைப்பு வந்து சிகிச்சை பெற்ற நிலையில் யாதவ் தனது மகள் சோனியாவின்(24) திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வந்தார்.

வரும் டிசம்பர் மாதம் 9ம் தேதி சோனியாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய சிறையில் இருந்த 8 சிமி தீவிரவாதிகள் யாதவை கொலை செய்துவிட்டு தப்பியோடினர். பின்னர் அந்த 8 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யாதவுக்கு சாம்புநாத்(36), பிரபுநாத்(32) என இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் ராணுவத்தில் உள்ளனர். அவர்கள் கவுஹாத்தி மற்றும் ஹிஸாரில் பணியாற்றி வருகிறார்கள்.
யாதவின் மரணத்தால் அவரின் குடும்பத்தார் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். சோனியாவின் திருமணத்தை நிச்சயித்த தேதியில் நடத்துவதா அல்லது தள்ளி வைப்பதா என்று இனி முடிவு செய்யப்படும் என உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications