ஹே, ஹே எங்களுக்கு பின்னாடி எவ்வளவு பெரிய ஆட்கள் எல்லாம் இருக்காங்க தெரியுமா?: ரஷ்மி நாயர்
திருவனந்தபுரம்: விபச்சார வழக்கில் சிக்கியுள்ள ராகுல் பசுபாலன், ரஷ்மி நாயருக்கு பின்னால் பெரும்புள்ளிகள் பலர் இருப்பது தெரிய வந்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த மாடல் ரஷ்மி நாயர், அவரது கணவர் ராகுல் பசுபாலன் ஆன்லைனில் விளம்பரம் கொடுத்து விபச்சாரம் செய்து வந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் சேர்த்து காசரகோட்டைச் சேர்ந்த பிரபல ரவுடி அக்பரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராகுல் ஃபேஸ்புக் மூலம் அழகிய பெண்களை மாடலாக்குவதாக ஆசை காட்டி கேரளாவுக்கு வரவழைத்து விபச்சாரத்தில் தள்ளி வந்துள்ளார். பெங்களூரில் வசித்து வந்த கோட்டயத்தைச் சேர்ந்த லினீஷ் மேத்யூ என்ற பெண் தான் இளம்பெண்கள், சிறுமிகளை தேர்வு செய்து கேரளாவுக்கு அனுப்பி வந்துள்ளார்.
லினீஷ் எல்லாம் ஒன்றுமே இல்லை என்றும், ராகுல், ரஷ்மிக்கு பெண்கள், சிறுமிகளை அனுப்பி வைக்க பெரிய கும்பலே உள்ளது என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ராகுல், ரஷ்மிக்கு பின்னால் பல பெரும்புள்ளிகள் உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ரஷ்மியும், ராகுலும் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்த என்ஜினியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications