பூரண மதுவிலக்கு: போதைக்காக சோப்பை சாப்பிட்ட நபர், ஞாபக மறதியால் அல்லாடும் 'குடி'மகன்கள்
பாட்னா: பீகாரில் பூரண மதுவிலக்கு அமலுக்கு வந்துள்ளதால் பலருக்கு கை, கால் உதறல் ஏற்பட்டுள்ளது. ஒருவர் போதைக்காக சோப்பை சாப்பிட்டுள்ளார்.
பீகாரில் ஆட்சி செய்யும் நிதிஷ் குமார் அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்தியுள்ளது. பூரண மதுவிலக்கு கடந்த செவ்வாய்க்கிழமை முதலில் அமலில் உள்ளதால் மது கிடைக்காமல் 'குடி'மகன்கள் அல்லாடுகிறார்கள்.

மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு மது குடிக்காததால் கை, கால் உதறல் ஏற்பட்டுள்ளது. பலருக்கு ஞாபக மறதி ஏற்பட்டு தனது குடும்பத்தாரையே அடையாளம் தெரியவில்லை. ஒருவர் போதைக்காக சோப்புகளை சாப்பிட்டுள்ளார்.
மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்காக மாநிலத்தில் மறுவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. நேற்று வரை மட்டும் 749 பேர் அந்த மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மது விலக்கு அமலுக்கு வரும் முன்பு தினமும் 600 முதல் 1200 மில்லி நாட்டுச்சரக்கு குடித்து வந்த நபருக்கு தற்போது அவரது குடும்பத்தாரையே அடையாளம் காண முடியவில்லை. அவரால் ஒழுங்காக நடக்க முடியவில்லை. மது இல்லாமல் அவரால் எதையும் செய்ய முடியவில்லை. சிலர் போதைக்காக பேப்பர்கள், வலி நிவாரணிகளை அதிக அளவில் சாப்பிட்டுள்ளனர்.
குடிப்பழக்கம் உள்ள ஒரு சிறுவன் மது கிடைக்காததால் கையில் கிடைப்பதை எல்லாம் வாயில் போட்டுவிடுகிறார். மிளகாயைக் கூட அவர் விட்டுவைக்கவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications