தாயை வீழ்த்தியவரை தோற்கடித்துப் பழிக்குப் பழி வாங்கிய லாலு மகன்!
பாட்னா: தமிழகத்திலாவது விரல் விட்டு எண்ணி விடும் அளவுக்குத்தான் வாரிசு அரசியல்வாதிகள் உள்ளனர். ஆனால் வட மாநிலங்களில் கால் விரல்களையும் சேர்த்து எண்ணினாலும் போதாது. அம்புட்டு குடும்பங்கள் அங்கு அரசியல் செய்து வருகின்றன. பீகாரில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் மொத்தம் 22 அரசியல் குடும்பங்கள் போட்டியிட்டதில் 7 குடும்பங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. 15 குடும்பங்கள் தோல்வியடைந்துள்ளன.
இந்த 22 குடும்பங்களில் பாஜக சார்பில் களம் கண்டவர்கள்தான் அதிகம். அதாவது 8 பேர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருந்தனர். லோக் ஜனசக்தி சார்பில் 6 பேரும், ஐக்கிய ஜனதாதளம் சார்பில் 5 பேரும் களம் கண்டனர்.
ராஷ்டிரிய ஜனதாதளம் சார்பில் 3 பேரும், மஞ்சியின் இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா சார்பில் 3 பேரும், சமாஜ்வாடி கட்சி சார்பில் ஒருவரும் களம் கண்டனர். ஒருவர் சுயேச்சையாக நின்றதாக இந்தியாஸ்பென்ட் புள்ளி்விவரம் தெரிவிக்கிறது.

100 சதவீத வெற்றி கண்ட லாலு குடும்பம்
இந்த வாரிசு வேட்பாளர்களில் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினர்தான் 100 சதவீத வெற்றியைப் பெற்றுள்ளனர். அதாவது மொத்தம் 2 பேர் போட்டியிட்டனர். இரண்டு பேருமே வெற்றி பெற்றுள்ளனர்.

2 மகன்கள்
லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் மஹுவா தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். இவர் மஞ்சி கட்சி வேட்பாளர் ரவீந்திர ராய் என்பவரை 28,155 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

2வது மகன்
லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி பிரதாப் யாதவ் ரகோப்பூர் தொகுதியிலிருந்து வென்றுள்ளார். இவர் பாஜக வேட்பாளர் சதீஷ் குமார் யாதவை வீழ்த்தினார்.

தாயை வீழ்த்தியவரை பழிவாங்கிய லாலு மகன்
இந்த சதீஷ் குமார் வேறு யாருமல்ல. கடந்த 2010ம் ஆண்டு நடந்த தேர்தலில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் சார்பில் போட்டியிட்டு இதே தொகுதியில் தேஜஸ்வியின் தாயாரான ராப்ரி தேவியை தோற்கடித்தவர் ஆவார். தற்போது தனது தாயாரை வீழ்த்தியவரை வென்று பழி தீர்த்துள்ளார் மகன் தேஜஸ்வி.

மஞ்சி மகன் தோல்வி
முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சியின் மகன் சந்தோஷ் சுமன் காங்கிரஸ் வேட்பாளரிடம் பத்தாயிரத்து சொச்சம் வாக்குகளில் தோல்வி அடைந்தார்.

பாஸ்வான் குடும்பத்துக்கு படு தோல்வி
இந்தத் தேர்தலில் ராம்விலாஸ் பாஸ்வான் குடும்பத்திற்குப் பெரும் தோல்வி ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்திலிருந்து போட்டியிட்ட 4 பேர் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

பாஸ்வான் தம்பி, மருமகள், மருமகன் தோல்வி
பாஸ்வானின் உறவினர் தம்பி மகன் பிரின்ஸ் ராஜ், தம்பி பசுபதி குமார் பரஸ், மருமகன் அனில் குமார், மருமகள் சரிதா தேவி ஆகியோர் இந்தத் தேர்தலில் படு தோல்வியைச் சந்தித்தனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications