பசுக்களை இப்படித்தான் பாதுகாக்கனும்.. கர்நாடகாவில் பிரச்சாரம்.. களம் இறங்கியது பாஜக!
பசுக்களை எப்படி பாதுக்காக்க வேண்டும் என்று கர்நாடகாவில் பாஜக பிரச்சாரம் செய்ய இருக்கிறது.
Recommended Video
பெங்களூர்: இந்தியா முழுக்க பாஜக ஆளும் மாநிலங்களிலும், பாஜக கட்சி பலமாக இருக்கும் மாநிலங்களிலும் 'கவ் ரக்ஷா' எனப்படும் பசு பாதுகாப்பு படை செயல்பட்டு வருகிறது. இவர்கள் பல சமயங்களில் மோசமான வன்முறைகளில் கூட ஈடுபட்டு இருக்கிறார்கள்.
தற்போது இவர்கள் கர்நாடக மாநிலத்தில் புதிய பிரச்சாரம் செய்ய இருக்கிறார்கள். பசுக்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று இந்த பிரச்சாரத்தில் கூறப்பட உள்ளது.
இதில் முக்கியமான பாஜக நிர்வாகிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். சில காலத்தில் கர்நாடக மாநில தேர்தல் நடக்க இருக்கும் சமயத்தில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
பசு செல்
ஒவ்வொரு கட்சியிலும் ஐடி செல், பிரச்சார செல் என நிறைய பிரிவுகள் இருக்கும். அதேபோல் கர்நாடக பாஜக கட்சியில் பசு பாதுகாப்பு செல் என்ற அமைப்பு இருக்கிறது. இந்த அமைப்புதான் இந்த பிரச்சாரத்தை ஏற்பாடு செய்து இருக்கிறது.
விழிப்புணர்வு பிரச்சாரம்
இந்த பிரச்சாரத்தில் பசுவின் பல்வேறு நன்மைகள் என்ன என்று கூறப்பட உள்ளது. அதேபோல் பசுவை எப்படி எல்லாம் பாதுகாக்க வேண்டும் என்றும் கூறப்படும். மேலும் மாட்டுக்கறி ஏன் உண்ண கூடாது என்றும் பேசப்பட இருக்கிறது.
எப்போது
வரும் பிப்ரவரி 2ம் தேதி பெங்களூரின் தெற்கு பகுதியில் இந்த நிகழ்வு நடக்க இருக்கிறது. தொடர்ந்து 24 மணி நேரம் இந்த பிரச்சாரம் நடக்கும். ஒவ்வொரு மக்களாக சந்தித்து பசு பாதுகாப்பு குறித்து விளக்கப்படும்.
முக்கியமானவர்கள்
இதில் கலந்து கொள்ள இந்தியா முழுக்க இருக்கும் முக்கிய பாஜக தலைவர்கள் வர உள்ளனர். முக்கியமாக கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா இந்த நிகழ்விற்கு வருவார். மேலும் இதன் பின் ராமாயணம் குறித்த பிரச்சாரம் அதே நாளில் நடக்கும்.