கடைசியில் ராகுல் போனது பஞ்சரான சைக்கிள்தானப்பா... பாஜக சொன்னது பலிச்சிருச்சே!
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி, உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதியுடன் கூட்டணி அமைத்ததன் மூலம் அவர் பஞ்சரான சைக்கிளில் பயணிக்கிறார் என்று பாஜக தலைவர்கள் கிண்டல் செய்தனர்.
டெல்லி: தந்தையோ விமானத்தில் பயணம் செய்தார்... ஆனால் அவரது மகனோ சைக்கிளில் அதுவும் பஞ்சரான சைக்கிளில் பயணம் செய்கிறார் என்று பாஜக தலைவர்கள் நக்கலடித்தது தற்போது உண்மையாகிவிட்டது.
உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி தொடங்கி மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெற்றது.
மிகவும் அதிக தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் முலாயம் சிங்குக்கும், மகன் அகிலேஷ் யாதவுக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பூசலில் பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு மத்தியில் அகிலேஷ் யாதவ் சைக்கிள் சின்னத்தை திரும்ப பெற்றார்.

கூட்டணி
பல்வேறு இழுபறிகளுக்கு மத்தியில் காங்கிரஸும், சமாஜவாதியும் கூட்டணி அமைத்தன. இருவரும் பணமதிப்பு இழப்பு விவகாரம், ராமர் கோயில் விவகாரம் உள்ளிட்டவற்றை முன்வைத்து பிரசாரம் செய்தனர்.

பாஜக கிண்டல்
அப்போது பாஜக மூத்த தலைவர் சாத்வி நிரஞ்சன், தந்தையோ (ராஜீவ் காந்தி) விமானத்தில் பறந்தார். ஆனால் அவரது மகனோ சைக்கிளின் காரியரில் உட்கார்ந்து பயணிக்கிறார் என்று கிண்டலடித்தார்.

அமித் ஷா
அதன்பின்னர் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவோ, ராகுல் சைக்கிள் காரியரில் உட்கார்ந்து கொண்டு பயணித்தது அல்லாமல் பஞ்சரான சைக்கிளில் பயணம் செலவதால் அவர் விரும்பும் இட்த்தை அடைவாரா என்பது சந்தேகமே என்று கூறியிருந்தார்.

எனக்கு சவால்
உ.பி.மாநிலம், மிர்ஸாபூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரதக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், இந்த பகுதியில் மின்சாரம் இருக்கிறதா இல்லையா என்பதை அறிய மின் கம்பியைத் தொட்டு பாருங்கள் என்று அகிலேஷ் யாதவ் எனக்கு சவால் விடுத்தார்.

மின்சாரம் இல்லை
மின்சாரம் இல்லாததால் மின் கம்பியைத் தொட கவலைப்படத் தேவையில்லை என்று ராகுல் காந்தி, குலாம் நபி ஆஸாதிடம் கூறியுள்ளார். இந்த மாநிலத்தில் மின்சாரம் இல்லாததை அகிலேஷின் புதிய நண்பர் ராகுலே ஒப்புக் கொண்டதால் நான் வேறு மின்கம்பியைத் தொட்டு பார்க்க வேண்டுமா?

ஷாக் அடிக்கும் எனக்கல்ல.. உங்களுக்கு...
சமாஜவாதி கட்சியினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் வரும் 11-ஆம் தேதி (தேர்தல் முடிவுகள்) ஷாக் அடிக்கும் என்று மோடி தெரிவித்திருந்தார். தற்போது இரு தரப்பினர் மீதும் டிரான்ஸ்பார்மரே பாய்ந்தது போன்ற அதிர்ச்சியில் உள்ளனர்.

படுதோல்வி
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 403 தொகுதிகளில் பாஜக 314 இடங்களில் வென்று புதிய சாதனை படைத்துள்ளது. இதை பார்க்கும்போது பாஜக தலைவர்கள் ராகுலை எச்சரித்தது எந்த அளவுக்கு உண்மையாகியுள்ளது என்பது இப்போது தெரிகிறது.












Click it and Unblock the Notifications