'அலர்ட்' காங்கிரஸ்.. கோவா, மேகலாயாவில் வாங்கியதை கர்நாடகாவில் பாஜகவுக்கு திருப்பி கொடுத்தது
Recommended Video

பெங்களூர்: கர்நாடகாவில், பாஜகவுக்கு காங்கிரஸ் ஷாக் கொடுத்துள்ளது.
கோவா, மேகாலயா போன்ற மாநிலங்களில், காங்கிரஸ் கட்சி அதிக சீட்டுகள் வென்றபோதிலும், பாஜக பிற கட்சி கூட்டணியோடு ஆட்சியமைத்தது.
ஆனால் இம்முறை காங்கிரஸ் விழித்துக்கொண்டது. கர்நாடகாவில், பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதனால் அதன் கையே ஓங்கியுள்ளது.

காங்கிரஸ் அதிரடி
என்றபோதிலும், பாஜக அசந்த நேரத்தில், மஜதவை முதலிலேயே தொடர்பு கொண்ட காங்கிரஸ் தலைவர்கள், "உங்களுக்கே முதல்வர் பதவியை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை தருகிறோம், எங்களோடு கூட்டணி வைத்துக்கொள்ளுங்கள்" என்று கிட்டத்தட்ட சரண்டர் ஆவதை போல கூறிவிட்டனர்.

வலை வீசும் காங்கிரஸ்
மேலும், 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள சுயேச்சைகளையும் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்பு கொண்டு தங்கள் பக்கம் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். இதை சற்றும் எதிர்பார்க்காத பாஜக லேட்டாகவே ரெஸ்பான்ஸ் செய்துள்ளது.

ஷாக்கில் பாஜக
பிற மாநிலங்களில் வேகமாக இருந்த பாஜகவை இம்முறை காங்கிரஸ் முந்திவிட்டது. சுயேச்சைகள் அதிக அளவில் வெற்றி பெற்றிருந்தாலாவது ஆபரேஷன் சக்சஸ் ஆகியிருக்கும்.

பெரும் குழப்பத்தில் பாஜக
ஆனால், மஜதவை மட்டுமே நம்ப வேண்டிய சூழல் உள்ளதால் பாஜக குழம்பி தவிக்கிறது. பாஜக தலைவர்கள் தொடர்ந்து ஆலோசனைகளை நடத்தி வருகிறார்கள். இதுவரை எந்த தகவலையும் அவர்கள் வெளியிடவில்லை.












Click it and Unblock the Notifications