பாஜகவின் ”தி கிரேட் இந்தியன் கொள்ளை” - கேஸ் விலையேற்றத்தை கடுமையாக சாடிய மம்தா பானர்ஜி
கொல்கத்தா: கேஸ் சிலிண்டர், எரிபொருள் விலையை உயர்த்தி மக்களை துன்புறுத்துவதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
Recommended Video

பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து தமிழகத்தில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ரூ.50 அதிகரித்துள்ளது. இதன் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,015-க்கு விற்பனையாகிறது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710 ஆக இருந்தது. இதனை மாதத்துக்கு ஒன்று அல்லது இருமுறை ரூ.25 அல்லது ரூ.50 என்ற கணக்கில் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வந்தன. தற்போது வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை கடந்த அக்டோபர் மாதம் ரூ.915.50 ஆக அதிகரித்தது.
4 மாதத்துக்கு பின் கடந்த மாதம் மீண்டும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியதன் மூலம், அது ரூ.965.50 ஐ தொட்டது. இந்த நிலையில் இந்த மாதமும் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பார்த்தால் கடந்த 16 மாதங்களில் மட்டும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.307 அதிகரித்து ரூ.1000-ஐ கடந்துள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பினர் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் ட்விட்டரில் கண்டனப் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "மத்திய அரசு மக்களை துன்புறுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
மீண்டும் மீண்டும் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலையையும் அத்தியாவசிய பொருட்கள் விலையையும் உயர்த்துவதன் மூலம் மிகப்பெரிய கொள்ளையை பாஜக அரங்கேற்றி வருகிறது. மக்கள் முட்டாளாக்கப்பட்டு வருகின்றனர். ஊடகங்கள் ஊமையாகவும் பார்வையற்றவர்களாகவும் இருப்பது கவலை தருகிறது." எனக் குறிப்பிட்டு உள்ளார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications