கர்நாடக சபாநாயகர் தேர்தல்.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய பாஜக.. காங். ரமேஷ் குமார் ஒருமனதாக தேர்வு
Recommended Video

பெங்களூரு: கர்நாடகா சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் ரமேஷ்குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
கர்நாடகா சபாநாயகர் பதவிக்கு காங்கிரஸ்- ஜேடிஎஸ் சார்பில் காங்கிரஸின் கே.ஆர். ரமேஷ் வேட்புமனுத் தாக்கல் செய்தார். திடீர் திருப்பமாக பாஜகவின் சுரேஷ்குமாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

இன்று பகல் 12 மணிக்கு கர்நாடகா சட்டசபை கூடியது. அப்போது முதலில் சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. கடைசி நேரத்தில் பாஜகவின் சுரேஷ்குமார், சபாநாயகர் தேர்தலில் போட்டியிடாமல் வாபஸ் பெற்றார்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் ரமேஷ்குமார் பெயரை முன்னாள் முதல்வர் சித்தராமையா முன்மொழிந்தார். துணை முதல்வர் பரமேஸ்வரா இதை வழிமொழிந்தார்.
Congress' Ramesh Kumar elected as Speaker of #Karnataka Assembly. pic.twitter.com/XxSi1VkN55
— ANI (@ANI) May 25, 2018
பின்னர் சபாநாயகர் தேர்வு குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதையடுத்து ரமேஷ்குமார் ஒருமனதாக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருக்கு முதல்வர் குமாரசாமி, எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து சபாநாயகர் இருக்கையில் ரமேஷ்குமார் அமரவைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications