பிரதமர் மோடியை எதிர்த்து விரல்களை நீட்டி பேசினால் கைகள் வெட்டப்படும் .. பாஜக தலைவர் ஆவேசம்
சிம்லா: பிரதமர் மோடியை எதிர்த்து விரல்களை நீட்டி பேசுபவர்களிள் கைகள் துண்டிக்கப்படும் என ஹிமாச்சல் பிரதேச பாஜக மாநில தலைவர் சத்பால் சிங் சத்தி ஆவேசமாக பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மக்களை தேர்தல் நாடு முழுவதும் நடந்து வருகிறது. கடந்த 23ம் தேதியுடன் 3 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துவிட்டது.
இன்னும் நான்கு கட்டங்களாக உத்தரப்பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், மகாராஷ்டிரா உள்பட பல்வேறு மாநிலங்களில் மக்களவை தேர்தல் நடக்க உள்ளது.
சர்வதேச சட்ட மாநாடு.. ரஷ்யா செல்கிறார் ரஞ்சன் கோகாய்?
தீவிர வாக்கு சேகரிப்பு
இதன் காரணமாக அனைத்து கட்சிகளும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் மேடையில் பேசி வாக்கு சேகரிக்கும் போது எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து பேசிவருகிறார்கள்.
மோசமாக திட்டினார்
இந்நிலையில் ஹிமாச்சல் பிரதேச மாநில தலைவர் சத்பால் சிங் சத்தி, அண்மையில் ராகுல் காந்தி குறித்து வரம்புமீறி சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கினார். பிரதமர் மோடியை திருடன் என சொல்லும் ராகுல் காந்தியை, அவரது தாய் சோனியா காந்தியை, அவரது மச்சான் ஆகியோரை பிணையில் வராத முடியாத அளவுக்கு ஜெயிலில் போடவேண்டும் என்று பேசினார். மேலும் மிக மோசமாக ராகுலை அவர் திட்டினார்.
இரண்டு நாள் தடை
இதனால் சத்பால் சிங் சத்தி பிரச்சாரம் செய்வதற்கு தேர்தல் ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை தடைவிதித்தது. இதன்படி அவர் இரண்டு நாட்கள் எங்குமே பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை.
மோடியை பேசினா
இந்நிலையில் நேற்று ஹிமாச்சலின் மண்டி நகரில் நடந்த பிரச்சாரத்தின் போது சத்பால் சிங் சத்தி மிகவும் ஆவேசமாக எதிர்க்கட்சி திட்டிபேசினார். அப்போது பிரதமர் மோடியை எதிர்த்து யாராவது விரல்களை நீட்டி பேசினால், அவர்களின் கைககள் துண்டிக்கப்படும் என ஆவேசமாக தெரிவித்தார். சத்பால் சிங் சத்தியின் இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.