குஜராத் பிரச்சாரத்தில் மக்களோடு டீ குடித்துக்கொண்டே மோடியின் ‘மான் கீ பாத்’ கேட்ட பா.ஜ.க தலைவர்கள்
பிரதமரின் 'மான் கீ பாத்’ நிகழ்ச்சியை குஜராத்தில் டீ குடித்துக்கொண்டே பா.ஜ.க தலைவர்கள் கேட்டுள்ளனர்.
அகமதாபாத் : குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு அங்கமாகவும், மோடி மீதான காங்கிரஸின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் விதமாகவும் பா.ஜ.க தலைவர்கள் வித்தியாசமான முறையைக் கையாண்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் காங்கிரஸ் ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடியை டீ விற்பவர் என்கிற விமர்சனத்தோடு கேலி செய்யும் வகையில் மீம் ஒன்று வெளியிடப்பட்டது. இதற்கு சமூக வலைத்தளங்களில் பலத்த கண்டனம் எழுந்தது. இதனால் அந்த மீம் நீக்கப்பட்டதோடு, மன்னிப்பும் கோரப்பட்டது.

இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக இன்று குஜராத் பிரச்சாரத்தில் வித்தியாசமான முறையை பா.ஜ.க.,வினர் கையாண்டனர். மாதம் தோறும் மோடி மக்களிடையே ரேடியோவில் பேசும் நிகழ்ச்சியான 'மான் கீ பாத்' ஒளிபரப்பானது. இதனை மக்களோடு மக்களாக டீ கடையில் அமர்ந்து டீ குடித்தபடியே பா.ஜ.க.,வின் முக்கியத் தலைவர்கள் கேட்டனர்.
பா.ஜ.க தலைவர் அமித் ஷா முஸ்லீம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான தரியாபூர் பகுதியிலும், நிதியமைச்சர் அருண் ஜெட்லி சூரத் மேற்கு தொகுதியிலும், குஜராத் முதல்வர் விஜய் ரூபாணி பஞ்சமால் தொகுதியிலும் உள்ள டீ கடைகளில் டீ குடித்தபடி 'மான் கீ பாத்' நிகழ்ச்சியைக் கேட்டனர்.
சுமார் 100க்கும் மேற்பட்ட பா.ஜ.க.,வின் முக்கியத் தலைவர்கள் குஜராத் மாநிலத்தில் இந்த பிரச்சார முறையைக் கையாண்டது இன்று அம்மாநில மக்களிடையே பலத்த ஆதரவு எழுந்துள்ளது. இதுகுறித்து மத்தியமைச்சர் ஸ்மிருதி இரானி கூறும்போது, காங்கிரஸிற்கு பாடம் கற்பிக்கும் விதமாகவே நாங்கள் இன்று இந்த முறையைக் கையாண்டிருக்கிறோம். டீ விற்பவர்களை ஏதோ சமூகத்தில் இருந்து ஒதுக்கப்பட்டவர்கள் போல பார்க்கும் மனப்பான்மையை காங்கிரஸ் கைவிடவேண்டும் என்று குறிப்பிட்டார்.
வருகிற டிசம்பர் மாதம் 9ம் தேதி குஜராத்தில் முதற்கட்ட தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், நாளை முதல் இரண்டு நாட்களுக்கு குஜராத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications