லோக்சபா தேர்தல் வரும் பின்னே.....மோடியின் 'திடீர்' ' திடீர்' பிரஸ் மீட் முன்னே!
பிரதமர் மோடியின் திடீர் செய்தியாளர்கள் சந்திப்பு, லோக்சபா தேர்தல் முன்கூட்டியே வரும் என்பதை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
Recommended Video

டெல்லி: பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த கையோடு லோக்சபா தேர்தலை நடத்துவதற்கு மத்தியில் ஆளும் பாஜக திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி திடீர் திடீரென செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி வருகிறார்.
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மிகப் பெரும் வெற்றியை பெற்று பிரதமரானார் மோடி. மத்தியில் ஆட்சியில் அமர்ந்தது முதல் பிரதமர் மோடியின் செய்தியாளர்கள் சந்திப்பு என்பது அபூர்வமான ஒன்றானதாகவே இருந்து வருகிறது.
சட்டசபை தேர்தல் காலங்களில் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தொலைக்காட்சிகளுக்கு சிறப்பு பேட்டி தருவதையும் மோடி வழக்கமாக வைத்திருக்கிறார். நாடாளுமன்ற கூட்டத் தொடர்கள் தொடங்கும்போது ஓரிரு வரிகள் மட்டுமே செய்தியாளர்களிடம் பேசிவிட்டு செல்வார் பிரதமர் மோடி. ஆனால் செய்தியாளர்கள் கேள்வி கேட்டால் அதற்கு பதில் வராது.

திடீர் செய்தியாளர்கள் சந்திப்பு
மத்திய அரசு மீதான ஏராளமான விமர்சனங்கள், சர்ச்சைகள் இருந்தபோதும் பிரதமர் வெளிநாடு பயணங்களில்தான் கவனம் செலுத்துகிறார் என்பது பொதுவான குற்றச்சாட்டு. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பிரதமர் மோடி திடீர் திடீரென செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.

செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் இல்லை
இன்றும் நாடாளுமன்ற வளாகத்தில் திடீரென செய்தியாளர்களுக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்தார். அப்போதும் கூட பட்ஜெட் பற்றி பிரதமர் மோடிதான் பேசினாரே தவிர செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை.

செல்வாக்கு சரிவால் முடிவு
பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த கையோடு லோக்சபா தேர்தலை நடத்தலாம் என மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. பாஜகவின் செல்வாக்கு படுவேகமாக சரிவதால் வேறுவழியே இல்லாமல் இப்போதே தேர்தலை நடத்தலாம் என்பதுதான் அக்கட்சியின் திட்டம்.

தேர்தல் வர போகிறது?
இந்நிலையில் பிரதமர் மோடி திடீர் திடீரென செய்தியாளர்களை சந்திக்கத் தொடங்கி இருக்கிறார். அதாவது யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பதைப் போல லோக்சபா தேர்தல் முன்கூட்டியே வரப் போகிறது என்பதை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது பிரதமர் மோடியின் திடீர் செய்தியாளர் சந்திப்புகள்.
-
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை!












Click it and Unblock the Notifications