லோக்சபா தேர்தல் வரும் பின்னே.....மோடியின் 'திடீர்' ' திடீர்' பிரஸ் மீட் முன்னே!
பிரதமர் மோடியின் திடீர் செய்தியாளர்கள் சந்திப்பு, லோக்சபா தேர்தல் முன்கூட்டியே வரும் என்பதை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
Recommended Video

டெல்லி: பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த கையோடு லோக்சபா தேர்தலை நடத்துவதற்கு மத்தியில் ஆளும் பாஜக திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி திடீர் திடீரென செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி வருகிறார்.
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மிகப் பெரும் வெற்றியை பெற்று பிரதமரானார் மோடி. மத்தியில் ஆட்சியில் அமர்ந்தது முதல் பிரதமர் மோடியின் செய்தியாளர்கள் சந்திப்பு என்பது அபூர்வமான ஒன்றானதாகவே இருந்து வருகிறது.
சட்டசபை தேர்தல் காலங்களில் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தொலைக்காட்சிகளுக்கு சிறப்பு பேட்டி தருவதையும் மோடி வழக்கமாக வைத்திருக்கிறார். நாடாளுமன்ற கூட்டத் தொடர்கள் தொடங்கும்போது ஓரிரு வரிகள் மட்டுமே செய்தியாளர்களிடம் பேசிவிட்டு செல்வார் பிரதமர் மோடி. ஆனால் செய்தியாளர்கள் கேள்வி கேட்டால் அதற்கு பதில் வராது.

திடீர் செய்தியாளர்கள் சந்திப்பு
மத்திய அரசு மீதான ஏராளமான விமர்சனங்கள், சர்ச்சைகள் இருந்தபோதும் பிரதமர் வெளிநாடு பயணங்களில்தான் கவனம் செலுத்துகிறார் என்பது பொதுவான குற்றச்சாட்டு. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பிரதமர் மோடி திடீர் திடீரென செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.

செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் இல்லை
இன்றும் நாடாளுமன்ற வளாகத்தில் திடீரென செய்தியாளர்களுக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்தார். அப்போதும் கூட பட்ஜெட் பற்றி பிரதமர் மோடிதான் பேசினாரே தவிர செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை.

செல்வாக்கு சரிவால் முடிவு
பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த கையோடு லோக்சபா தேர்தலை நடத்தலாம் என மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. பாஜகவின் செல்வாக்கு படுவேகமாக சரிவதால் வேறுவழியே இல்லாமல் இப்போதே தேர்தலை நடத்தலாம் என்பதுதான் அக்கட்சியின் திட்டம்.

தேர்தல் வர போகிறது?
இந்நிலையில் பிரதமர் மோடி திடீர் திடீரென செய்தியாளர்களை சந்திக்கத் தொடங்கி இருக்கிறார். அதாவது யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பதைப் போல லோக்சபா தேர்தல் முன்கூட்டியே வரப் போகிறது என்பதை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது பிரதமர் மோடியின் திடீர் செய்தியாளர் சந்திப்புகள்.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்!












Click it and Unblock the Notifications