பாஜக எம்.பி எனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார்: புகார் கொடுத்த தொழிலதிபர்

கர்நாடக மாநிலம் மங்களூர் மாவட்டத்தின் தட்சின கன்னடா தொகுதியின் எம்.பியாக பாஜகவின் நளின்குமார் கட்டீல் பதவி வகித்து வருகிறார். இவருக்கு எதிராக பந்தர் காவல் நிலையத்தில் சதீஷ் ஷெட்டி என்ற தொழிலதிபர் புகார் அளித்துள்ளார். புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
பெங்களூரை சேர்ந்த நான், தற்போது மும்பையில் தொழில் செய்து வருகிறேன். எனக்கும், தட்சின கன்னட மாவட்டம் சிருவா பகுதியை சேர்ந்த வினோதா என்பவருக்கும் சிலஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நான் பெங்களூரில் இருந்து மும்பைக்கு தொழில் செய்ய சென்றேன். ஆனால் எனது மனைவி என்னுடன் வர மறுத்துவிட்டார். இதனால் எனது மனைவி குழந்தைகளுடன் சிருவா பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக எனது மனைவியில் நடவடிக்கையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் நான், கடந்த வாரம் சிருவா பகுதிக்கு வந்தேன்.
அப்போது என் மனைவி வினோதா, யாரிடமோ நீண்ட நேரம் போனில் பேசி கொண்டிருந்தார். இதுபற்றி கேட்டால் தோழிகளுடனும், உறவினர்களுடன் பேசுகிறேன் என்று கூறி வந்தார். இந்த நிலையில் அவரது செல்போனை பார்த்தால், ஒரே எண்ணில் நீண்ட நேரம் பேசியுள்ளார். மேலும் அந்த எண், நளின்குமார் கட்டீல் எம்.பி. உடையது என்பது தெரியவந்தது. இதனால் அந்த எம்.பி., எனது மனைவியுடன் கள்ள தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து எனது மனைவியிடம் கேட்டால், சண்டைக்கு வருகிறார். என்னுடன் வாழ பிடிக்கவில்லை என்றும் கூறுகிறார். இதனால் நளின்குமார் கட்டீல், எனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்து எனது வாழ்க்கையை சீரழித்து விட்டார். என் மனைவியை என்னிடம் இருந்து பிரித்து விட்டார். இதனால் அந்த எம்.பி. மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த எம்.பி.யிடம் இருந்து எனது மனைவியை மீட்டு தரவேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டு உள்ளது.
இதனிடையே புகாரை எம்.பி. நளின்குமார் கட்டீல் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், என் மீது புகார் கொடுத்த அவர் யார் என்றே எனக்கு தெரியாது. எனது நற்பெயரை கொடுக்க வேண்டும் என்று யாரோ வேண்டுமென்ற சதி செய்கிறார்கள். போலீசார் விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்றார். இதே தொகுதியில் இந்த தேர்தலிலும் பாஜக சார்பில் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications