ஜேஎன்யு பல்கலைக்கு ராகுல் சென்றதை நினைத்து காங். வெட்கப்பட வேண்டும்: அமித்ஷா தாக்கு
டெல்லி: நாட்டிற்கு எதிராக குரல் எழுப்பிய டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் போய் சந்தித்து பேசியதற்கு அக் கட்சியினர் வெட்கப்பட வேண்டும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கூறியுளளார்.
உத்திரப்பிரதேச மாநிலம் பிருந்தாவனில் பாஜக இளைஞரணி கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட அமித்ஷா பேசுகையில், தேசிய பல்கலை கழகம் ஒன்றில் தேச விரோத வாசகங்கள் கூறப்பட்டுள்ளன.

இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு அளிக்க ராகுல் செல்கிறார். அதனால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி யாருக்கு துணை நிற்கிறார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தேச விரோத சக்திகள் நியாயப்படுத்தப்படுகின்றன. நடக்கிற விசயம் தேசத்திற்கு எதிரானவை இல்லை எனில், அது என்ன என்று நான் ஆச்சரியமடைகிறேன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இப்படிப்பட்ட கோஷங்கள்தான் கருத்து சுதந்திரம் என்றால், தேச துரோகமாக எதை கூறுவீர்கள்? இதைப் பற்றி காங்கிரஸ் தலைவர் சோனியாவின் கருத்து என்ன? அவரும் தனது மகனின் செயலை ஆதரிக்கிறாரா? இவ்வாறு அமித்ஷா பேசினார்.












Click it and Unblock the Notifications