பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் அலகாபாத்தில் துவங்கியது
அலகாபாத்: பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் அலகாபாத்தில் இன்று துவங்கியது. இந்த கூட்டம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் நகரில் இன்று துவங்கியது. இன்றும், நாளையும் நடக்கும் இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.

மத்தியில் பாஜக அரசு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முக்கியமாக உத்தர பிரதேச மாநில சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் மத்திய அரசின் சாதனைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
கூட்டம் நடக்கும் கயஸ்தா பாத்சாலா விளையாட்டு மைதானத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாளை அலகாபாத்தில் பாஜக சார்பில் பேரணி நடக்க உள்ளது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் மோடி கலந்து கொள்கிறார்.
பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தையொட்டி அலகாபாத் நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கட்சியினர் நகரின் பல்வேறு பகுதிகளில் பேனர்கள் வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications