இந்தி பேசும் மாநிலங்களில் பாஜகவுக்கு மரண அடி காத்திருக்கிறது... சொல்வது சத்ருகன் சின்ஹா
பாட்னா சாகிப்: இந்தி பேசும் மாநிலங்களில் லோக்சபா தேர்தலில் பாஜக படுதோல்வி அடையும் என்று காங்கிரஸ் வேட்பாளர் சத்ருகன் சின்ஹா கூறியுள்ளார்.
பாஜகவில் இருந்து காங்கிரஸுக்கு தாவிய சத்ருகன் சின்ஹா, பீகாரின் பாட்னா சாகிப் தொகுதியில் போட்டியிடுகிறார், தேர்தல் பிரசாரம் முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் சத்ருகன் சின்ஹா கூறியதாவது:
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட இந்தி பேசும் மாநிலங்களில் பாஜகவுக்கு மரண அடி காத்திருக்கிறது. ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு மற்றும் பழிவாங்கும் அரசியல்தான் பாஜகவுக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தும்.
பாஜகவில் மோடியும் அமித்ஷாவும்தான் என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது. மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோருக்கு கட்டாய ஓய்வளிக்கப்பட்டுவிட்டது. இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
இடுப்பில் காவி.. கையில் தடி.. டோட்டலாய் மாறி கேதார்நாத்தில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி!
இவ்வாறு சத்ருகன் சின்ஹா கூறினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சுபோத் காந்த் சகாய் கூறுகையில், எதிர்க்கட்சிகளின் கூட்டணி 400 இடங்களைக் கைப்பற்றும். பாஜகவுக்கு 100க்கும் குறைவான இடங்கள்தான் கிடைக்கும். மோடி அரசாங்கத்தின் மீது அனைத்து தரப்பு மக்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்றார்.