பாஜக பிரமுகர் கொலையால் மைசூரில் வெடித்தது வன்முறை.. போலீஸ் குவிப்பு
மைசூர்: பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மத மோதலாக உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் கர்நாடகாவில், குறிப்பாக, மைசூர் பகுதியில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
மைசூரை சேர்ந்தவர் கே.ராஜு. பாஜக நிர்வாகி. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மைசூரின் உதயகிரி பகுதியிலுள்ள டீக்கடையில் நின்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

வேறு ஒரு மதப்பிரிவினர் மைசூரின் ஒரு பகுதியில் வழிபாட்டு தலம் கட்டிய நிலையில், அதை எதிர்த்ததற்காக ராஜு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மைசூர் பந்த்துக்கு பாஜக மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. நேற்று நடைபெற்ற பந்த்தின்போது, பஸ்கள், ஆட்டோக்கள் கல் வீச்சுக்கு உள்ளாகின. சில கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து மைசூரில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மைசூரில் இன்று பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது. தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் அதிரடி படையினர் வரவழைக்கப்பட்டு, கொடி அணி வகுப்பு நடத்தப்பட்டது. பஸ், ஆட்டோக்கள் வழக்கம்போல இயங்கின. பள்ளி, கல்லூரிகள் திறந்திருந்தன.
முக்கிய பகுதிகளில் பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மைசூர் நகரம் கொஞ்சம், கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.












Click it and Unblock the Notifications