கருப்புப் பண முதலைகளுக்கு எதிரான வேட்டை .. 60 பேர் மீது முதல் கட்ட நடவடிக்கை!
டெல்லி: வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கி வைத்திருக்கும் 60 இந்தியர்களுக்கு எதிரான நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
சுவிஸ் வங்கிகளில் 1195 பேருக்கு கணக்கு உள்ளதாகவும், மொத்தம் 25 ஆயிரத்து 420 கோடி ரூபாய் பதுக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இந்தக் கணக்குகளை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ள 1195 வங்கி கணக்குகளில் 350 கணக்குகள் ஏற்கனவே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுவிட்டன. இவற்றில் 60 கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள கணக்குகள் மார்ச் 31ம் தேதிக்குள் ஆய்வுக்குட்படுத்தப்படும்.
தற்போது வெளியாகியுள்ள புள்ளிவிபரம், 5 ஆண்டுகளுக்கு முந்தைய விபரங்கள். அவை புதியவை அல்ல என்றும் ஜேட்லி விளக்கியுள்ளார்.
இந்த 60 பேரில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தொடர்பானவர்களும் அடங்குவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 60 பேர் மீதும் முதல் கட்டமாக வரி ஏய்ப்பு தொடர்பான விசாரணை மட்டுமே நடந்துள்ளதாம். இவர்கள் மீது இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தங்களை படி, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பின்னரே தனிபட்ட விசாரணைக்கு உட்படுத்த முடியும்.
கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம், எச்எஸ்பிசி வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 627 பேரின் பட்டியல் மத்திய அரசால் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதிலிருந்து மூன்று பேர் பெயர்கள் மட்டுமே பகிரங்கமாக வெளியிடப்பட்டன என்பது நினைவிருக்கலாம்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications