குஜராத், தமிழக அரசுகளுடன் இணைந்து பணியாற்றிய 'கறுப்பு பட்டியல்' என்.ஜி.ஓ
காந்திநகர்: மத்திய உளவுத்துறையால் கறுப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ள என்.ஜி.ஓக்களில் ஒன்று, பிரதமர் நரேந்திரமோடியின் சொந்த மாநிலமான குஜராத் அரசுக்கு பல திட்டங்களில் உதவிகரமாக இருந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் செயல்படும் என்.ஜி.ஓக்கள் எனப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குறித்து விசாரிக்க கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி காலத்தில் உளவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டது. பாஜக ஆட்சி அமைந்துள்ள நிலையில், உளவுத்துறை தனது அறிக்கையை சமீபத்தில் மத்திய அரசிடம் அளித்தது.
இதில் கிரீன்பீஸ் உள்ளிட்ட பல என்ஜிஓக்கள் நாட்டுக்கு எதிராக செயல்பட்டதாக, கறுப்பு பட்டியலில் இடம்பிடித்துள்ளன. மின்சார உற்பத்தி திட்டங்கள், நிலக்கரி, சுரங்கத்தொழில்களில் இந்த என்ஜிஓக்கள் தலையிட்டதால், இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதம் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காண்பிக்கிறது.
இந்த அறிக்கை சுட்டிக்காட்டும் அமைப்பில் ஒன்று கிளைமேட் ஒர்க்ஸ். இது கிரீன்பீஸ் அமைப்புக்கு கணிசமாக நிதி உதவி செய்துள்ளது. கிளைமேட் ஒர்க்ஸ் அமைப்பின் இந்திய கிளை அமைப்பான 'சக்தி பவுண்டேசன்' என்ற என்ஜிவோ, இந்த நிதியை கொண்டு, குஜராத், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அரசுடன் இணைந்து பல திட்டங்களை மேற்கொண்டுள்ளன. இதை சக்தி பவுண்டேசன், அமைப்பின் போர்ட் உறுப்பினர், நிதின் தேசாய் ஒப்புக்கொள்கிறார். மேலும் அவர் கூறுகையில், மத்திய, மாநில அரசுகளிடம் இணைந்து மரபுசாரா எரிசக்தி துறையில் அதிக அளவு பணியாற்றியுள்ளோம் என்றார்.
'குளோபல் நாடாளுமன்ற உறுப்பினர் சர்வதேசம்' என்ற அமைப்பிற்கும் கிளைமேட் ஒர்க்ஸ் பவுண்டேசன், நிதி உதவி செய்துவந்துள்ளது. இந்த சர்வதேச அமைப்பில், 80 நாடுகளை சேர்ந்த எம்.பிக்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவ்வமைப்பின் முதல் தலைவராக பதவி வகித்தவர் தற்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர்.
கடந்த மாதம் அமைச்சரவையில் இணைந்தபிறகுதான், அப்பதவியை பிரகாஷ் ஜாவேத்கர் ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, 'நாடாளுமன்ற உறுப்பினர் சர்வதேச அமைப்புக்கு', யார் நிதி உதவி செய்தார்கள் என்ற விவரம் தனக்கு தெரியாது என்று தெரிவித்தார்.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications