வெளிநாட்டில் அக்கவுண்ட் வைத்திருப்போர் பெயரையெல்லாம் வெளியிட முடியாது: மத்திய அரசு
டெல்லி: கருப்பு பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் வைத்திருக்கும் இந்தியர்கள் பெயர்களை வெளியிடுவதில் தயக்கம் இல்லை என்றபோதிலும், ஆதாரமில்லாமல் அனைவர் பெயர்களையும் வெளியிட முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கருப்பு பணம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கில் இன்று மத்திய அரசு சார்பில், பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
சீல் வைக்கப்பட்ட அந்த பிரமாணப்பத்திரத்தில் டாபர் குரூப்பின் பிரதீப் பர்மன், கோவா சுரங்க தொழிலதிபர் ராதா எஸ். திம்ப்லோ மற்றும் தங்கம், வெள்ளி வியாபாரி பங்கஜ் சிமன்லால் லோத்யா ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்த பிறகு உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு கூறியதாவது: வெளிநாடுகளிலுள்ள வங்கிகளில் கருப்பு பணம் வைத்துள்ள இந்தியர்களின் பெயர்களை வெளியிடாமல் மறைத்து வைக்க மத்திய அரசுக்கு எந்த நோக்கமும் கிடையாது.
JUST IN: #BlackMoney #SC pic.twitter.com/jZmJGqAZAD
— Doordarshan News (@DDNewsLive) October 27, 2014 வரி ஏய்ப்பு செய்து வெளிநாட்டு வங்கிகளில் குவிக்கப்பட்டுள்ள பணம் குறித்த தகவல் அனைத்தும், வெளியிடப்படும். வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் எல்லோரும் கருப்பு பணம் வைத்திருப்போர் என்று அர்த்தம் கிடையாது.
வெளிநாட்டு வங்கிகளில் உள்ள பணம் முறையாக சம்பாதிக்கப்பட்டதா, அல்லது, வரி ஏய்ப்பு செய்யப்பட்ட பணமா என்பது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து, அடிப்படை ஆதாரம் இருந்தால் மட்டும் அவர்கள் பெயரை வெளியிடும். இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்கினால்.. யாரும் பெண்களை வேலைக்கு எடுக்க மாட்டார்கள்- உச்ச நீதிமன்றம்! -
தமிழ்நாடு புதிய டிஜிபி நியமனம் எப்போது? மார்ச் 20-ல் யுபிஎஸ்சி கூட்டம் - உச்ச நீதிமன்றத்தில் தகவல்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications