For Quick Alerts
For Daily Alerts
Just In
உ.பி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து.. 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் பலி
உத்தரப்பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சரயூ ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேயச மாநிலம் பஹ்ரெய்ச் பகுதியில் பாயும் சரயூ ஆற்றில் 12 பேர் படகு பயணம் மேற்கொண்டனர். அப்போது திடீரென படகு மூழ்கியது.
இதில் படகில் இருந்தவர்கள் ஆற்றில் முழ்கினர். படகு மூழ்கியதில் 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் 6 பேரின் உடல்களையும் மீட்டனர். கடந்த மாதம் யமுனை ஆற்றில் ஏற்பட்ட விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
At least six people drowned, including two children, after a boat capsized in Saryu river in Behta in Uttar Pradesh. All the bodies have been recovered.
Story first published: Saturday, October 7, 2017, 9:24 [IST]