ஈராக்கில் பணியாற்ற இந்திய தொழிலாளியின் உடல் பஞ்சாப் வந்தது
சன்டிகர்: ஈராக்கில் பணியாற்றிய பஞ்சாபைச் சேர்ந்த தொழிலாளியான ஷம்ஷேரின் உடல் இந்தியா வந்தது.
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் அரசை எதிர்த்து போராடி வருகிறார்கள். இதனால் ஈராக்கில் பணிபுரியும் இந்தியர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் ஈராக்கில் பணியாற்றிய ஒருவரின் உடல் இந்தியா வந்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குருதாஸ்பூர் மவாட்டத்தைச் சேர்ந்தவர் ஷம்ஷேர்(24). வறுமையில் வாடும் குடும்பத்தில் பிறந்தவர். வறுமையை போக்க அவரை அவரது பெற்றோர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஈராக் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் ஈராக்கில் போர் மூண்டதால் ஷம்ஷேர் தன்னுடன் பணிபுரிந்த 11 பேருடன் கடந்த மாதம் 22ம் தேதி இந்தியா கிளம்பினார். வழியில் அவரது உடல் நிலை மோசமானதால் அவர் துபாயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் பலியானார். இதையடுத்து அவரது உடல் இந்தியா வந்துள்ளது.
இகு குறித்து ஷம்ஷேரின் அப்பா சச்சா சிங் கூறுகையில்,
என் மகன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலமாக இருப்பதாக தெரிவித்ததாக அரசு கூறியது. ஆனால் அவர்கள் மீட்புக்குழுவினரை அங்கு அனுப்பவில்லை. அது தான் உண்மை. அவர்கள் மட்டும் குழுக்களை அனுப்பியிருந்தால் என் மகன் உயிருடன் வந்திருப்பார். இது எல்லாம் நாடகம். தீவிரவாதிகளின் பிடியில் உள்ள மற்றவர்களையாவது பத்திரமாக மீட்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications