ஹவுரா- செகந்திராபாத் ஃபலக்னுமா விரைவு ரயிலில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு - நிபுணர்கள் சோதனை
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: ஹவுரா -செகந்திராபாத் ஃபலக்னுமா விரைவு ரயிலில் இன்று காலை மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் கண்டறியப்பட்டுள்ளது பயணிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
மேற்கு வங்காள ரயில் நிலையத்தில் இன்று காலை ஃபலக்னுமா ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக சந்தேகம் எழுந்ததை அடுத்து ரயில்வே போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

சோதனையில் பயணிகள் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து ஹவுரா - செகந்திராபாத் ஃபலக்னுமா விரைவு ரயில் பயணிகள் பெரும் பதற்றத்திற்கு உள்ளானார்கள்.
வெடிகுண்டினைக் கைப்பற்றிய மேற்கு வங்க போலீசார், ரயில்வே அதிகாரிகள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அது குறித்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் பயணிகள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications