சபரிமலை கோவிலுக்கு அருகில் வெடிகுண்டு பொருட்கள்... பக்தர்கள் பீதி
சபரிமலை கோவிலுக்கு அருகில் வெடிகுண்டு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்கு அருகில் வெடிகுண்டு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
கேரளாவில் இருக்கும் சபரிமலை கோவில் உலக புகழ்பெற்றதாகும். வருடம் தோறும் இந்த கோவிலுக்கு நிறைய மக்கள் வருவது வழக்கம்.

முக்கியமாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நிறைய பேர் கோவிலுக்கு வழிபாடு நடத்த செல்வார்கள். மேலும் இதில் தமிழக பக்தர்களும் கணிசமான அளவில் கலந்து கொள்வார்கள்.
இந்த நிலையில் அங்கு போலீஸ் நடத்திய சோதனையில் வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. வெடி குண்டுகள் தயாரிக்க செய்யப்படும் பொருட்கள் அங்கு இருந்துள்ளது.

தற்போது இதுகுறித்து கேரளா போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. அங்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்கதர்களுக்கு இந்த செய்தி பதற்றத்தை உண்டாக்கி இருக்கிறது.












Click it and Unblock the Notifications