வெடிகுண்டு புரளியால் பாராளுமன்ற வளாகத்தில் திடீர் பரபரப்பு !
டெல்லி: பாராளுமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று மாலை தொலைபேசியில் தகவல் வந்தது. இதனால் பதட்டமான சூழல் உருவாகியது. இதையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு படையினர் விரைந்தனர்.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் முடிவுக்கு வந்துள்ளது என்றும் தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பெரும் பதட்டத்தை ஏற்படுத்திய இந்த தாக்குதலின் கோரம் மறைவதற்குள் டெல்லியில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தீவிரவாதிகள் 2 பேர் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளன.

இதை அடுத்து டெல்லியில் பாதுகாப்பு ஏற்படுக்ள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வருகிற 26 ஆம் தேதி குடியரசு தின கொண்டாடப்பட உள்ள நிலையில் தீவிரவாதிகளால் அசம்பாவிச சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பில் கவனமாக இருக்கும்படி மத்திய அரசு பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று மாலை தொலைபேசியில் தகவல் வந்தது. இதனால் பதட்டமான சூழல் உருவானது. இதையடுத்து உடனடியாக பாராளுமன்றத்துக்கு வெடிகுண்டு செயலிழப்பு படையினர், போலீஸ் படையினர் விரைந்தனர். தீயணைப்பு வண்டிகளும் விரைந்து வந்தன.
இந்த குழுவினர் பாராளுமன்ற வளாகம் முழுவதையும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தி, வெடிகுண்டு ஏதேனும் வைக்கப்பட்டுள்ளதா? என சல்லடை போட்டு தேடினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. எனவே, தொலைபேசி தகவல் புரளிதான் என தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், தொலைபேசி மூலம் புரளி கிளப்பிய நபர், ஜோதி நகரைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாட்ஸ் அப், செல்போன் மூலம் போலீஸ் வெடிகுண்டு வைத்திருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர்கள் அவ்வப்போது மிரட்டல் விடுக்கும் சம்பவம் தொடர் கதையாகவே உள்ளது. எனவே இதை தடுக்கும் வகையில் போலீசார் நடவடிக்கை எடுத்தால் தேவையில்லா புரளியில் இருந்து விடுபடலாம்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications