மும்பையில் 17-ந் தேதி இறைச்சி விற்பனைக்கு அனுமதி அளித்தது ஹைகோர்ட்
மும்பை: மும்பையில் வரும் 17-ந் தேதி இறைச்சி விற்பனைக்கு விதிக்கப்பட்ட அரசின் தடை உத்தரவை மும்பை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது. இருப்பினும் அன்றைய நாளில் விலங்குகளை கொல்ல விதிக்கப்பட்ட தடையை நீக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஜெயின் சமூகத்தினரின் பர்யூஷன் விரத காலத்தை முன்வைத்து மும்பை மாநகராட்சி இறைச்சி விற்பனைக்கு தடை விதித்தது. இத்தடை உத்தரவு கடும் சர்ச்சையை கிளப்பியது.

இந்தத் தடைக்கு எதிராக பாம்பே மட்டன் டீலர்கள் சங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் அனூப் வி.மோதா, அஜ்மத் சையது ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசின் உத்தரவு நாட்டின் மதச்சார்பின்மை மற்றும் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. ஒரு பிரிவு மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக் கூடியது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து அரசின் உத்தரவுக்கு நீதிபதிகள் தடை விதித்தனர். ஆனால், அந்நாளில் விலங்குகளை கொல்வதற்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் இறைச்சிக் கூடங்களை மூடும் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்.
மேலும் நீதிபதிகள், ஆட்டிறைச்சி, கோழி இறைச்சிக்கு மட்டும் ஏன் தடை விதிக்க வேண்டும். மீன், முட்டை அசைவம் இல்லையா? இத்தடை கிளப்பியுள்ள அரசியல் சர்ச்சையானது மக்களின் உணவு பழக்கவழக்கங்களை வைத்து அரசியல் செய்யப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது. 2004-ம் ஆண்டு முதல் மகாராஷ்டிரா அரசு ஜெயின் திருவிழாவை ஒட்டி இறைச்சி விற்பனைக்கு இரண்டு நாட்களுக்குத் தடை விதித்திருந்தாலும், அது தீவிரமாக கடைபிடிக்கப்படவில்லை என்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications