12 வருடம் காத்திருந்து அப்பாவைக் கொன்றவரைப் போட்டுத் தள்ளி உடலை 12 துண்டாக வெட்டிய மகன்
மொராதாபாத்: உத்திரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் தனது தந்தையை கொன்ற நபரை 12 வருடம் காத்திருந்து, மகன் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொலையைச் செய்த நபரின் வயது 24 ஆகும். 12 வயதாக இருந்தபோது இவரது தந்தையை ஒருவர் கொலை செய்தார். அவரைத்தான் தற்போது இப்படி வித்தியாசமாக பழி தீர்த்துள்ளார் இந்த இளைஞர்.

கொலை செய்து உடலைத் துண்டு துண்டாக வெட்டிய பிறகு செய்தியாளர்களையும் அழைத்துப் பேசியுள்ளார் இந்த நபர். அதன் பின்னர் அவரைப் போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து எஸ்பி ராம் சுரேஷ் யாதவ் கூறுகையில், "தனது குற்றத்தை இவர் ஒத்துக் கொண்டுள்ளார். இவர் பயன்படுத்திய செல்போன், சிம் கார்டு உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன. இவரை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்றார்.
இந்த நபரின் பெயர் ஆலம் கான். இவர் போலீஸ் நிலையித்தில் கூடிய செய்தியாளரக்ளிடம் பேசுகையில், "எனது கனவு நிறைவேறி விட்டது. சந்தோஷமாகப் போகிறேன்" எனக் கூறினார்.
டிசம்பர் 16ம் தேதி இந்த சம்பவம் நடந்தது. கொலை செய்யப்பட்ட நபரை தனது வீட்டுக்கு வரவழைத்து முதலில் மது அருந்தச் செய்துள்ளார் ஆலம்கான். பின்னர் வீட்டில் இருந்த டேப் ரிக்கார்டரை சத்தமாக வைத்துள்ளார். அதன் பிந்னர் கத்தியை எடுத்துக் குத்திக் கொலை செய்தார்.
பிறகு கத்தியால் உடலை 12 துண்டுகளாக வெட்டியுள்ளார். தந்தையைக் கொலை செய்து 12 ஆண்டுகள் ஆனதைக் குறிப்பிடும் வகையில் இவ்வாறு அவர் செய்துள்ளார். பிறகு அதை பாலத்தீன் பையில் போட்டு ராம்கங்கா நதிக் கரையில் போட்டு விட்டார். அதன் பின்னர் தான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்துள்ளார் ஆலம்.
தற்போது கொலை செய்யப்பட்டுள்ள நபர் ஆலம் தந்தையின் குடும்ப நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், என்ன காரணத்திற்காக ஆலமின் தந்தை கொலை செய்யப்பட்டார் என்பது குறித்த விபரங்கள் இல்லை.












Click it and Unblock the Notifications