இஸ்ரேல்- காஸா மோதல்: பிரதமர் நரேந்திர மோடி கவலை
டெல்லி: இஸ்ரேல் மற்றும் காஸா பகுதியில் நிகழ்ந்து வரும் மோதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காஸா பகுதிகளில் மோதல் நிகழ்ந்து வருகிறது. இதில் இஸ்ரேல் நடத்தி வரும் கண்மூடித்தனமான வான்வழித் தாக்குதல்களினால் 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் பிரிக்ஸ் நாடுகளின் உச்சிமாநாட்டுக்கு பிரேசில் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்சனை குறித்தும் பேசினார்.
இஸ்ரேல்- பாலஸ்தீன மோதல் பற்றி மோடி பேசியதாவது:
மேற்கு ஆசியாவில் நிலையற்ற தன்மை உருவாகி வருவது கவலை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட நாடுகளை நாம் தொடர்ந்து வெறுமனே வேடிக்கை பார்ப்பது கடுமையான பின்விளைவுகளை உருவாக்கும்.
இந்த மோதல், உலக அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும். ஈராக்கில் நடந்து வரும் மோதலை முடிவுக்கு கொண்டு வர நாம் கூட்டாக என்ன செய்யலாம் என்று பிரிக்ஸ் நாடுகள் ஆராய வேண்டும்.
வளைகுடாநாடுகளில் வாழும் 70 லட்சம் இந்தியர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுவதால் இந்தியா குறிப்பாக கவலைப்படுகிறது.
இவ்வாறு நரேந்திர மோடி தமது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications